ETV Bharat / state

குமரியில் கடல் சீற்றம் - வீடுகளுக்குள் புகுந்த கடல்நீர்!

கன்னியாகுமரி: நீரோடி கடற்கரை கிராமத்தில் கடல் சீற்றத்தால் ஐந்து லட்சம் மதிப்பிலான மீன் விற்பனைத் தலம் சேதமடைந்தது. மேலும் வீடுகளில் கடல்நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

author img

By

Published : Jun 11, 2019, 7:18 PM IST

sea

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழை இன்று பகல் பொழுதிலும் நீடித்தது.

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றம் அதிகரிக்கும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்து நிலையில், குமரி மேற்கு கடற்கரைப் பகுதிகளில் கடல் வழக்கத்தை விட ஆக்ரோஷமாக காணப்பட்டது.

இதனால் நாட்டுப்படகை பயன்படுத்தும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நீரோடி பகுதியில் கடல் அலையால் கடந்த ஓராண்டுக்கு முன் மீன்வர்களால் கட்டப்பட்ட ஐந்து லட்சம் மதிப்பிலான கட்டிய மீன் விற்பனைத் தலம் முற்றிலும் சேதமடைந்தது.

குமரியில் கடல் சீற்றம்

மேலும் தடுப்புச் சுவரையும் தாண்டி பல்வேறு வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். அதே போல கடலோர கிராமங்களை இணைக்கும் சாலைகள் மழையால் துண்டிக்கப்படும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழை இன்று பகல் பொழுதிலும் நீடித்தது.

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றம் அதிகரிக்கும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்து நிலையில், குமரி மேற்கு கடற்கரைப் பகுதிகளில் கடல் வழக்கத்தை விட ஆக்ரோஷமாக காணப்பட்டது.

இதனால் நாட்டுப்படகை பயன்படுத்தும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நீரோடி பகுதியில் கடல் அலையால் கடந்த ஓராண்டுக்கு முன் மீன்வர்களால் கட்டப்பட்ட ஐந்து லட்சம் மதிப்பிலான கட்டிய மீன் விற்பனைத் தலம் முற்றிலும் சேதமடைந்தது.

குமரியில் கடல் சீற்றம்

மேலும் தடுப்புச் சுவரையும் தாண்டி பல்வேறு வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். அதே போல கடலோர கிராமங்களை இணைக்கும் சாலைகள் மழையால் துண்டிக்கப்படும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நீரோடி கடற்கரை கிராமத்தில் கடல் சீற்றம். ஐந்து லட்சம் மதிப்பில்  கட்டப்பட்ட மீன் விற்பனை தளம் சேதம். வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி. சாலைகள் துண்டாகும் அபாயம்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் குமரியில் கனமழை பெய்தது. தொடர்ந்து இன்று பகலிலும் விட்டு விட்டு மழை நீடிக்கிறது. 
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றம் அதிகரிக்கும் , கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் வழக்கத்தை விட ஆக்ரோஷமாக காணப்படுகிறது. 
இதனால் நாட்டுபடகில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நீரோடி பகுதியில் மீனவர்கள் கடந்த ஓராண்டுக்கு முன் அவர்களே 5 லட்சம் மதிப்பில் கட்டிய மீன் விற்பனை தளம் கடல் அலையால் முற்றிலும் சேதம் அடைந்தது. 
மேலும் பல்வேறு வீடுகளுக்குள் கடல் அலை தடுப்பு சுவரையும் தாண்டி தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். அதே போல கடலோர கிராமங்களை இணைக்கும் சாலைகள் மழையால் துண்டிக்கப்படும் தருவாயில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.