ETV Bharat / state

இந்தியா வந்து கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க  மாவட்ட ஆட்சியரிடம் மனு ! - ஏமன் நாட்டில் பிடிபட்டிருந்த ஒன்பது மீனவர்கள்

கன்னியாகுமரி: ஏமன் நாட்டில் பிடிபட்டிருந்த ஒன்பது மீனவர்கள் தற்போது அவர்களிடமிருந்து தப்பி கடல் வழியாக இந்தியா வந்து கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Fisherman rescue petition
Fisherman rescue petition
author img

By

Published : Nov 28, 2019, 2:33 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த நியூட்டன், எஸ்களின், வினிஸ்டன்,விவேக், சாஜன்,கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் உட்பட ஒன்பது பேர் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஏமன் நாட்டில் சுல்தான் என்பவரால் மீன்பிடித் தொழிலுக்காக வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

இந்த ஒன்பது மீனவர்களும் ஒரு வருடமாக அரேபிய முதலாளிக்காக ஏமன் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர். ஒருவருடமாக அரேபிய முதலாளியின் அச்சுறுத்தலுக்கு பயந்து தாங்கள் உழைத்த உழைப்புக்கு ஊதியம் கிடைக்காமல் அவதிப்பட்டு உள்ளனர். இதனையடுத்து இந்த மாதம் 19ஆம் தேதி அரேபிய முதலாளியின் விசைப்படகில் அங்கிருந்து தப்பித்து இந்தியா நோக்கி கடல் வழியாக புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மீனவர்கள் குடும்பத்தாருடன் தொடர்புகொண்டு இன்னும் மூன்று தினங்களுக்குள் கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் வந்து சேர்ந்துவிடுவோம் என கூறியுள்ளனர்.

மீனவர்களை மீட்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

எனவே, ஒன்பது மீனவர்களையும் அரசு அதிகாரிகள் விரைந்து மீட்டு கரை சேர்க்க வலியுறுத்தி தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு மற்றும் கடலில் காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதையும் படிங்க:

வனத்துறையினரைக் கண்டித்து மலை வாழ் மக்கள் ஆர்பாட்டம் !

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த நியூட்டன், எஸ்களின், வினிஸ்டன்,விவேக், சாஜன்,கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் உட்பட ஒன்பது பேர் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஏமன் நாட்டில் சுல்தான் என்பவரால் மீன்பிடித் தொழிலுக்காக வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

இந்த ஒன்பது மீனவர்களும் ஒரு வருடமாக அரேபிய முதலாளிக்காக ஏமன் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர். ஒருவருடமாக அரேபிய முதலாளியின் அச்சுறுத்தலுக்கு பயந்து தாங்கள் உழைத்த உழைப்புக்கு ஊதியம் கிடைக்காமல் அவதிப்பட்டு உள்ளனர். இதனையடுத்து இந்த மாதம் 19ஆம் தேதி அரேபிய முதலாளியின் விசைப்படகில் அங்கிருந்து தப்பித்து இந்தியா நோக்கி கடல் வழியாக புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மீனவர்கள் குடும்பத்தாருடன் தொடர்புகொண்டு இன்னும் மூன்று தினங்களுக்குள் கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் வந்து சேர்ந்துவிடுவோம் என கூறியுள்ளனர்.

மீனவர்களை மீட்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

எனவே, ஒன்பது மீனவர்களையும் அரசு அதிகாரிகள் விரைந்து மீட்டு கரை சேர்க்க வலியுறுத்தி தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு மற்றும் கடலில் காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதையும் படிங்க:

வனத்துறையினரைக் கண்டித்து மலை வாழ் மக்கள் ஆர்பாட்டம் !

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மற்றும் கேரளாவை சேர்ந்த 9 மீனவர்கள் ஏமன் நாட்டில் மீன் பிடிக்கச் சென்று அந்நாட்டு அரபி முதலாளிகளால் சித்திரவதை செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் தற்போது தப்பி கடல் வழியாக இந்தியா வந்து கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Body:கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த நியூட்டன், எஸ்களின், வினிஸ்டன்,விவேக், சாஜன் மற்றும் கேரளாவை சேர்ந்த மீனவர்கள் உட்பட உட்பட 9 பேர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஏமன் நாட்டில் சுல்தான் என்பவரால் மீன்பிடித் தொழிலுக்காக வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
இந்த ஒன்பது மீனவர்களும் ஒரு வருடமாக அரேபிய முதலாளிக்காக ஏமன் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர். ஏமன் நாட்டு முதலாளியான சுல்தான் என்பவர் மீனவர்களுக்கு அவர்கள் பிடித்த மீன்களுக்கான ஊதியத்தை கொடுக்கவில்லை.
ஒருவருடமாக அரேபிய முதலாளியின் அச்சுறுத்தலுக்கு பயந்து தாங்கள் உழைத்த உழைப்புக்கு ஊதியம் கிடைக்காமல் அவதிப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்த மாதம் 19ம் தேதி அரேபிய முதலாளியின் விசைப்படகில் அங்கிருந்து தப்பித்து இந்தியா நோக்கி கடல் வழியாக புறப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை மீனவர்கள் குடும்பத்தாருடன் தொடர்புகொண்டு இன்னும் மூன்று தினங்களுக்குள் கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் வந்து விடுவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் 9 மீனவர்களையும் அரசு அதிகாரிகள் விரைந்து மீட்டு கரை சேர்க்க வலியுறுத்தி தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு மற்றும் கடலில் காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.