ETV Bharat / state

வாத்து மேய்த்த விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

author img

By

Published : Sep 12, 2020, 7:09 PM IST

கன்னியாகுமரி : அஞ்சுகிராமம் அருகே வாத்து மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி ஒருவர், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வாத்து மேய்த்த விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
Electric shock Farmer dead

கன்னியாகுமரி மாவட்டம், வட்டக்கோட்டை அருகேவுள்ள லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராமையா (வயது 75). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் விவசாயி ராமைய்யா இன்று (செப்.12) வட்டக்கோட்டையை அடுத்துள்ள புதுக்குளம் பகுதியில் வாத்து, கோழிகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அருகிலுள்ள மின்கம்பத்தின் பக்கவாட்டு கம்பியை எதிர்பாராத விதமாக அவர் தொட்டுள்ளார்.

இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ராமையா உயிரிழந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊரதி மூலம் அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வட்டக்கோட்டை அருகேவுள்ள லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராமையா (வயது 75). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் விவசாயி ராமைய்யா இன்று (செப்.12) வட்டக்கோட்டையை அடுத்துள்ள புதுக்குளம் பகுதியில் வாத்து, கோழிகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அருகிலுள்ள மின்கம்பத்தின் பக்கவாட்டு கம்பியை எதிர்பாராத விதமாக அவர் தொட்டுள்ளார்.

இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ராமையா உயிரிழந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊரதி மூலம் அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.