ETV Bharat / state

'திமுக கூட்டணி உடையும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம்' - முத்தரசன்

author img

By

Published : Jan 18, 2020, 4:34 PM IST

கன்னியாகுமரி: திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்னை குடும்பப்பிரச்னை, இதனால் இந்தக் கூட்டணி உடையும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Cpi mutharasan news  சிபிஐ முத்தரசன்  திமுக கூட்டணி பிரச்னை  முத்தரசன் நாகர்கோவில்  Cpi mutharasan  dmk alliance problem  Cpi mutharasan talks about dmk alliance problem in nagarkovil
முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக்க முயற்சித்து வருகிறது. தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதால் அவர்கள் விரும்புகிற சட்டத்தை நிறைவேற்றி வருகிறார்கள். மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்பட்டுவருகிறது.

பிரதமர் மோடி ஹிட்லர் பாணியில் செயல்பட்டு வருகிறார். அவரின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. சிறு, குறு தொழில்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. அதிலிருந்து மக்களை திசைத்திருப்ப பாஜக நாடாளுமன்றத்தில் தங்களுக்கிருக்கிற பெரும்பான்மையைத் தவறாகப் பயன்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை நிறைவேற்றிவருகிறது. இது மக்களைப் பிளவுபடுத்த பாஜக மோற்கொண்ட நடவடிக்கைகள்.

திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்னை குடும்பப் பிரச்னை. இதனால் இந்தக்கூட்டணி உடையும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம். நடந்த முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுக செய்த முறைகேடுகள் ஒரு ஜனநாயகப் படுகொலை.

முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு

களியக்காவிளையில் வில்சன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதமோ இந்துத்துவ தீவிரவாதமோ எந்த தீவிரவாதத்தையும் மதச்சார்பற்ற இந்தியாவில் அனுமதிக்கமுடியாது. வில்சன் கொலை வழக்கில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஒரு கட்சிக்குத் தொடர்பு இருப்பதாக பொறுப்பற்ற முறையில் பேசுவது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல" என்றார்.

இதையும் படிங்க: பெரியார் குறித்த பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்: திருமாவளவன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக்க முயற்சித்து வருகிறது. தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதால் அவர்கள் விரும்புகிற சட்டத்தை நிறைவேற்றி வருகிறார்கள். மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்பட்டுவருகிறது.

பிரதமர் மோடி ஹிட்லர் பாணியில் செயல்பட்டு வருகிறார். அவரின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. சிறு, குறு தொழில்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. அதிலிருந்து மக்களை திசைத்திருப்ப பாஜக நாடாளுமன்றத்தில் தங்களுக்கிருக்கிற பெரும்பான்மையைத் தவறாகப் பயன்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை நிறைவேற்றிவருகிறது. இது மக்களைப் பிளவுபடுத்த பாஜக மோற்கொண்ட நடவடிக்கைகள்.

திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்னை குடும்பப் பிரச்னை. இதனால் இந்தக்கூட்டணி உடையும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம். நடந்த முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுக செய்த முறைகேடுகள் ஒரு ஜனநாயகப் படுகொலை.

முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு

களியக்காவிளையில் வில்சன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதமோ இந்துத்துவ தீவிரவாதமோ எந்த தீவிரவாதத்தையும் மதச்சார்பற்ற இந்தியாவில் அனுமதிக்கமுடியாது. வில்சன் கொலை வழக்கில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஒரு கட்சிக்குத் தொடர்பு இருப்பதாக பொறுப்பற்ற முறையில் பேசுவது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல" என்றார்.

இதையும் படிங்க: பெரியார் குறித்த பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்: திருமாவளவன்

Intro:கன்னியாகுமரி: இந்திய பிரதமர் மோடி ஹிட்லர் பாணியில் செயல்பட்டு வருகிறார் அவரின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியா கடும் நெருக்கடியில் உள்ளது. மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

Body:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நாகர்கோவில் வந்தார். அப்போது செய்தியர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குடும்ப பிரச்சனை. இதனால் இந்த கூட்டணி உடையும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம். நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் அதிமுக செய்த முறைகேடுகள் ஒரு ஜனநாயக படுகொலை.

மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது. ஹிட்லர் பாணியில் தான் மோடி செயல்பட்டு வருகிறார். அவரின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியா கடும் நெருக்கடியில் உள்ளது. சிறு குறு தொழில்கள் அழிந்து வருகிறது. அதில் இருந்து மக்களை திசை திருப்ப பாஜக தங்கள் நாடாளுமன்ற பெரும்பான்மை யை தவறாக பயன்படுத்தி வருகிறது.
குடியுரிமையை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் மக்களை பிளவு படுத்த பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள்.

காவலர் வில்சன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் இந்துத்துவ திவுரவாதம் இதுபோன்ற படுகொலையில் ஈடுபட்டு வருகின்றனர். மத சார்பற்ற நாட்டில் எந்த திவிரவாதத்தையும் அனுமதிக்க முடியாது. காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் திமுகவினருக்கு தொடர்பு இருக்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது அவர் வகித்த பதவிகளுக்கு அழகல்ல இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசுவது தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.