ETV Bharat / state

தோவாளை பத்திர பதிவுத்துறை அலுவலருக்கு கரோனா!

author img

By

Published : Aug 6, 2020, 2:17 PM IST

கன்னியாகுமரி: தோவாளை பத்திரப் பதிவுத்துறை அலுவலருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அலுவலகம் மூடப்பட்டது.

பதிவாளர் அலுவலகம்
பதிவாளர் அலுவலகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தோவாளை தாலுகாவில் ஆரல்வாய்மொழி, தோவாளை, வெள்ளமடம் செண்பகராமன்புதூர், திட்டுவிளை அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில் தோவாளை பகுதியில் உள்ள பத்திரப் பதிவுத்துறை அலுவலருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது இன்று (ஆக. 6) உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது. பின் பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தோவாளை தாலுகாவில் ஆரல்வாய்மொழி, தோவாளை, வெள்ளமடம் செண்பகராமன்புதூர், திட்டுவிளை அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில் தோவாளை பகுதியில் உள்ள பத்திரப் பதிவுத்துறை அலுவலருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது இன்று (ஆக. 6) உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது. பின் பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.