ETV Bharat / state

அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக போராடிய இளைஞர்கள் கைது!

author img

By

Published : Jul 14, 2019, 6:19 PM IST

கன்னியாகுமரி: அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

போராடிய இளைஞர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இன்று பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாட்டின் அரசின் விலையில்லா மடிக்கணனி வழங்கும் விழா சுங்கான்கடை பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிகொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று, நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் குவிந்த காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள், கோபிசெட்டிப்பாளையத்தில் காமராஜரால் திறக்கப்பட்ட அலங்கார வளைவின் பெயர் மாற்றியதையும், தஞ்சையில் காமராஜரின் சிலையை அகற்றியதையும் கண்டித்தும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு காணப்பட்டது. பின் காவல்துறையினர் எச்சரித்தும் அங்கிருந்து கலைய மறுத்த ஆர்ப்பாட்டகாரர்களை காவலர்கள் கைது செய்தனர்.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக போராடிய இளைஞர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இன்று பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாட்டின் அரசின் விலையில்லா மடிக்கணனி வழங்கும் விழா சுங்கான்கடை பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிகொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று, நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் குவிந்த காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள், கோபிசெட்டிப்பாளையத்தில் காமராஜரால் திறக்கப்பட்ட அலங்கார வளைவின் பெயர் மாற்றியதையும், தஞ்சையில் காமராஜரின் சிலையை அகற்றியதையும் கண்டித்தும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு காணப்பட்டது. பின் காவல்துறையினர் எச்சரித்தும் அங்கிருந்து கலைய மறுத்த ஆர்ப்பாட்டகாரர்களை காவலர்கள் கைது செய்தனர்.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக போராடிய இளைஞர் கைது!
Intro:கோபிசெட்டிப்பாளையத்தில் காமராஜரால் திறக்கப்பட்ட அரலங்கார வளைவின் பெயர் மாற்றியதையும் தஞ்சையில் காமராஜரின் சிலையை அகற்றியதையும் கண்டித்து நாகர்கோவிலில் அரசு விழாவில் பங்கேற்ற செங்கோட்டையனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரசார் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.Body:TN_KNK_01_GANGIRAS_SHRIEK_SCRIPT_TN10005
எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி
கோபிசெட்டிப்பாளையத்தில் காமராஜரால் திறக்கப்பட்ட அரலங்கார வளைவின் பெயர் மாற்றியதையும் தஞ்சையில் காமராஜரின் சிலையை அகற்றியதையும் கண்டித்து நாகர்கோவிலில் அரசு விழாவில் பங்கேற்ற செங்கோட்டையனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரசார் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

கோபிசெட்டிப்பாளையம் கரட்டூரில் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட 45வது காங்கிர ஸ் மாநாட்டு அலங்கார வளைவின் பெயரை மாற்றியதை கண்டித்தும், தஞ்சை மாவட்டம் கீழ்வேளூரில் காமராஜரின் சிலை அகற்றப்பட்டதை கண்டித்தும் இன்று இளைஞர் காங்கிரசார் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தமிழக அரசின் விலையில்லா மடிக்கணனி பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் விழா சுங்கான்கடை பகுதியில் நடைபெற்ற நிலையில், அவ்விழாவில் பங்கேற்ற பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரசார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.