ETV Bharat / state

குருவிமலை பாலாற்றில் நண்பர்களுடன் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

author img

By

Published : Dec 28, 2020, 1:16 AM IST

காஞ்சிபுரம்: குருவிமலை பாலாற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

இளைஞர் உயிரிழப்பு
இளைஞர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் குருவிமலை பகுதியிலுள்ள பாலாற்றில் திருவள்ளூர் நகரைச் சேர்ந்த பாலாஜி (18) என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் நேற்று (டிசம்பர் 27) குளிக்கச் சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற பாலாஜி, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்புத் துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த மாகரல் காவல்துறையினர், பாலாஜியின் உடலை உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இதே பாலாற்றில் பள்ளி மாணவிகள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

காஞ்சிபுரம் குருவிமலை பகுதியிலுள்ள பாலாற்றில் திருவள்ளூர் நகரைச் சேர்ந்த பாலாஜி (18) என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் நேற்று (டிசம்பர் 27) குளிக்கச் சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற பாலாஜி, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்புத் துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த மாகரல் காவல்துறையினர், பாலாஜியின் உடலை உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இதே பாலாற்றில் பள்ளி மாணவிகள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.