ETV Bharat / state

உத்திரமேரூர் ஏரியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொட்டப்பட்ட மருந்துகள்!

காஞ்சிபுரம் : உத்திரமேரூர் பெரிய ஏரியில் கொட்டப்பட்ட மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

author img

By

Published : Oct 29, 2019, 4:46 PM IST

whast tablets fire

காஞ்சிபுரம் மாவட்டம் வேடபாளையம் என்னுமிடத்தில் உத்திரமேரூர் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் ஏராளமான மருந்து, மாத்திரைகளை ஏரியில் கொட்டி தீ வைத்துள்ளனர்.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் மருந்து மாத்திரைகளும் அவைகளின் துற்நாற்றமும் வீசிவருகிறது. நீர்நிலைகளில் மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் முற்றிலும் நிறம் மாறி காணப்படுகிறது. கடந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தால் மழை பெய்யாமல் வறட்சியடைந்த ஏரி தற்சமயம் பெய்துவரும் மழையால் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், இதுபோன்று செயலால் ஏரியின் மொத்த நீரும் பாதிக்கும் சூழல் நிலவியுள்ளது.

ஏரியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொட்டப்பட்ட மருந்துகள்

எனவே மாவட்ட நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்தி மருந்து மாத்திரைகளை கொட்டிச் சென்ற நபர் யார் என்பதைக் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், இங்கு கொட்டிக்கிடக்கும் மருந்து மாத்திரைகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வேடபாளையம் என்னுமிடத்தில் உத்திரமேரூர் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் ஏராளமான மருந்து, மாத்திரைகளை ஏரியில் கொட்டி தீ வைத்துள்ளனர்.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் மருந்து மாத்திரைகளும் அவைகளின் துற்நாற்றமும் வீசிவருகிறது. நீர்நிலைகளில் மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் முற்றிலும் நிறம் மாறி காணப்படுகிறது. கடந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தால் மழை பெய்யாமல் வறட்சியடைந்த ஏரி தற்சமயம் பெய்துவரும் மழையால் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், இதுபோன்று செயலால் ஏரியின் மொத்த நீரும் பாதிக்கும் சூழல் நிலவியுள்ளது.

ஏரியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொட்டப்பட்ட மருந்துகள்

எனவே மாவட்ட நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்தி மருந்து மாத்திரைகளை கொட்டிச் சென்ற நபர் யார் என்பதைக் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், இங்கு கொட்டிக்கிடக்கும் மருந்து மாத்திரைகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு

Intro:உத்திரமேரூரில் உள்ள பெரிய ஏரிகள் மருந்து மாத்திரைகளை கொட்டி தீவைத்து சென்ற மர்ம நபர்கள்.


Body:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வேடபாளையம் எனுமிடத்தில் வைர மேக தடாகம் என்னும் உத்திரமேரூர் பெரிய ஏரி உள்ளது.

இந்த ஏரியில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஏராளமான மருந்து மாத்திரைகள் டப்பாவில் அடைக்கப்பட்ட மருந்துப் பொருள்கள் போன்றவற்றை இந்த ஏரியில் கொட்டி தீ வைத்துள்ளனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் மருந்து மாத்திரைகளும் அவைகளின் வாடைகளும் பல தொலைவிற்கு வீசி வருகிறது. நீர்நிலைகளில் மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டு உள்ளதால் தண்ணீர் முற்றிலும் நிறம் மாறி காணப்படுகிறது.

கடந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தால் மழை பெய்யாமல் வறட்சியடைந்து காய்ந்து கிடந்த இந்த ஏரி தற்சமயம் பெய்துவரும் மழையால் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் இதுபோன்று மர்ம நபர்கள் கொட்டிச் சென்ற இந்த மருந்து மாத்திரைகள் ஏரியின் மொத்த நீரையும் பாதிக்கும் சூழல் நிலவியுள்ளது.

இந்தப்பகுதியில் கால்நடைகள் அதிகம் உள்ளதால் இந்த நீரைக் குடித்து இறந்து போகும் சூழலும் நிலவி வருகிறது எனவே இந்த மருந்து மாத்திரைகளை கொட்டி சென்றவர்கள் யார், எதற்காக கொட்டி சென்றார்கள், வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்து கொட்டி சென்றார்களா, இவை ஆபத்து நிறைந்த மருத்துவ கழிவுகளா, என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள்லோடு இந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

.Conclusion:எனவே மாவட்ட நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்தி மருந்து மாத்திரைகளை கொட்டிச் சென்ற நபயார் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், இங்கு கொட்டிக்கிடக்கும் மருந்து மாத்திரைகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.