ETV Bharat / state

தடுப்பணையில் நிரம்பி வழியும் உபரி நீர் - பார்ப்பதற்கு ஆர்வம் காட்டும் மக்கள்! - people love to watch palar dam

காஞ்சிபுரம்: கல்பாக்கம் அருகே வாயில் ஊரில் உள்ள பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையில், தற்போது உபரி நீரானது நிரம்பி வழிவதைப் பார்ப்பதற்கு பொது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பார்ப்பதற்குக் குவிந்த மக்கள் கூட்டம்
author img

By

Published : Nov 5, 2019, 8:11 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள பையூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாகத் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ. 32 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் பணிகள் 95 விழுக்காடு நிறைவடைந்த நிலையில் உள்ளது.

தற்போது பருவமழைத் தொடங்கியதால் உபரி நீரானது ஏரிகள் நிரம்பி, பாலாற்றுக்கு வரத்தொடங்கியது. இதனையடுத்து பாலாற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணையில், தண்ணீர் சுமார் 10 அடிக்கு மேலாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் உபரி நீர் நிரம்பி வழிகிறது.

நிரம்பிய தடுப்பணையைப் பார்வையிட குவியும் மக்கள்

தடுப்பணையில் நீர் நிரம்பி வழிவதைக் காண்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் மனதிற்கு அமைதி கொடுப்பதாகப் பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அணையைப் பார்ப்பதற்குப் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த அணையைக் கட்டியது மூலம் 30 ஆண்டுகளாகக் கடலில் கலக்கும் உபரி நீரானது, தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க : கடல்போல காட்சியளிக்கும் பவானிசாகர் அணை!

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள பையூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாகத் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ. 32 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் பணிகள் 95 விழுக்காடு நிறைவடைந்த நிலையில் உள்ளது.

தற்போது பருவமழைத் தொடங்கியதால் உபரி நீரானது ஏரிகள் நிரம்பி, பாலாற்றுக்கு வரத்தொடங்கியது. இதனையடுத்து பாலாற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணையில், தண்ணீர் சுமார் 10 அடிக்கு மேலாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் உபரி நீர் நிரம்பி வழிகிறது.

நிரம்பிய தடுப்பணையைப் பார்வையிட குவியும் மக்கள்

தடுப்பணையில் நீர் நிரம்பி வழிவதைக் காண்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் மனதிற்கு அமைதி கொடுப்பதாகப் பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அணையைப் பார்ப்பதற்குப் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த அணையைக் கட்டியது மூலம் 30 ஆண்டுகளாகக் கடலில் கலக்கும் உபரி நீரானது, தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க : கடல்போல காட்சியளிக்கும் பவானிசாகர் அணை!

Intro:கல்பாக்கம் அருகே வாயில் ஊரில் உள்ள பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையில் தற்போது உபரி நீரானது நிரம்பி வழிகிறது இதனை காண பொது மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்


Body:காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் உட்பட்ட கல்பாக்கம் அருகே உள்ள பையூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தடுப்பணை கட்டப்பட்டு வருகின்றது சுமார் 32 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த தடுப்பு அணியானது 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் உள்ளது தற்போது பருவமழை தொடங்கி இருந்ததால் உபரி நீரானது ஏரிகள் நிரம்பி பாலாற்றில் வரத்தொடங்கியது இதனையடுத்து குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணையில் தண்ணீர் தடுக்கப்பட்டு சுமார் 10 அடிக்கு மேலாக உபரி நீரானது தேக்கி வைக்கப்பட்டுள்ளது மூன்று தினங்களுக்கு முன்பு உபரி நீரானது சுமார் ஒரு அடி வீதம் குறைவாக இருந்தது தற்போது நிரம்பி வழியும் நிலையில் உள்ளது இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் இந்த தடுப்பு அணை கட்டியதால் 30 ஆண்டுகளாக கடலில் கலக்கும் உபரி நீரானது தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது இதனால் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


Conclusion:தடுப்பணையில் இருந்து உபரி நீரானது நிரம்பி வழிவதை காண்பதற்கு அப்பகுதியை சுற்றியுள்ள கிராம பொதுமக்களும் விவசாயிகளும் குவிந்த வண்ணம் உள்ளனர் தடுப்பணையில் நீர் நிரம்பி வழிவதை காண்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் மனதிற்கு அமைதி கொடுப்பதாகும் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.