ETV Bharat / state

படுஜோராக நடைபெறும் பாக்கெட் சாராயம் விற்பனை - கண்டு கொள்ளாத போலீசார்! - பாக்கெட் சாராயம் விற்பனை

காஞ்சிபுரம்: திருக்கழுக்குன்றம் அருகே சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வரும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

kanchipuram
author img

By

Published : Sep 30, 2019, 9:51 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள பரமசிவன் தெருவில் பாக்கெட் சாராய வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. திருக்கழுக்குன்றம் காவல்துறையினர் கண்டு கொள்ளாததால் ஏராளாமானோர் அங்கு சென்று சாராயத்தை வாங்குகின்றனர்.

இந்நிலையில், அங்கு சென்று குடிக்கும் நபர்கள் போதை தலைக்கேறியதும் நடக்கமுடியாமல் பரமசிவன் தெருவிலேயே ஆங்காங்கே படுத்து விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

திருக்கழுக்குன்றம் பகுதிப் பெண்கள்

இதுகுறித்து அப்பகுதி பெண்கள்,

'கடந்த ஒருவாரமாக இங்கு சாராய வியாபாரம் நடந்து வருகிறது. இதை ரோந்து பணியில் வரும் காவல்துறையினர் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

எனவே, சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் திருக்கழுக்குன்றம் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கோரிக்கை வைக்கின்றோம்' - இவ்வாறு தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

வெளிமாநில பாக்கெட் சாராயம் வைத்திருந்த இருவர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள பரமசிவன் தெருவில் பாக்கெட் சாராய வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. திருக்கழுக்குன்றம் காவல்துறையினர் கண்டு கொள்ளாததால் ஏராளாமானோர் அங்கு சென்று சாராயத்தை வாங்குகின்றனர்.

இந்நிலையில், அங்கு சென்று குடிக்கும் நபர்கள் போதை தலைக்கேறியதும் நடக்கமுடியாமல் பரமசிவன் தெருவிலேயே ஆங்காங்கே படுத்து விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

திருக்கழுக்குன்றம் பகுதிப் பெண்கள்

இதுகுறித்து அப்பகுதி பெண்கள்,

'கடந்த ஒருவாரமாக இங்கு சாராய வியாபாரம் நடந்து வருகிறது. இதை ரோந்து பணியில் வரும் காவல்துறையினர் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

எனவே, சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் திருக்கழுக்குன்றம் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கோரிக்கை வைக்கின்றோம்' - இவ்வாறு தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

வெளிமாநில பாக்கெட் சாராயம் வைத்திருந்த இருவர் கைது!

Intro:திருகழுகுன்றம் அருகே, பாக்கெட் சாராய விற்பனை கனஜோராக நடந்து வருகிறது.



Body:காஞ்சிபுரம் மாவட்டம் திருகழுகுன்றம் மலை பகுதியில் காய்ச்சும் சாராயத்தை விலைக்கு வாங்கி வரும் சாராய வியாபாரிகள், பாக்கெட்களில் அடைத்து, விற்பனை செய்து வருகின்றனர்

காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் திருகழுகுன்றம் போலீஸார், சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். ஒரு வாரமாக, திருகழுகுன்றம் பரமசிவன் தெருவில் சாராய வியாபாரிகள் முகாமிட்டு ஷிப்ட் முறையில், நாள் முழுவதும் சாராய பாக்கெட் தலா, 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
போலீஸார் கெடுபிடி இல்லாமல், பாக்கெட் சாராய விற்பனை அமோகமாக நடந்து வருவதால், வெளியூரை சேர்ந்த, குடிமகன்கள் அதிகளவில் வருகின்றனர். போதை தலைக்கேறியதும், அரை நிர்வாண கோலத்தில், தெருவில் படுத்துக் கிடக்கின்றனர். அதனால், பெண்கள் முகம் சுழிக்க நேரிடுகிறது.
.Conclusion:போலீஸார் ஜீப்பில் நெடுஞ்சாலை ரோந்து பணி மேற்கொண்டபோது, போலீஸார் கண்முன்னே பாக்கெட் சாராய விற்பனை நடந்தும் கண்டுகொள்ளாமல் சாலை வழியாக சென்றனர். சாராயம் விற்பனை செய்வது குறித்து கண்டும், காணாமல் இருக்கும் போலீஸாரை கண்டறிந்து, மாவட்ட போலீஸ் காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.