ETV Bharat / state

ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் தாயும், மகளும் உயிரிழப்பு!

author img

By

Published : Mar 6, 2021, 6:15 AM IST

காஞ்சிபுரம் : சுங்குவார்சத்திரம் அருகே சோகண்டி பகுதியில் இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிய சாலை விபத்தில் தாயும், மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் தாயும், மகளும் உயிரிழப்பு!
ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் தாயும், மகளும் உயிரிழப்பு!

சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சோகண்டி பகுதியிலிருந்து மதுரமங்கலம் செல்லும் செக்போஸ்ட் அருகில் எதிரெதிரே வந்த இரு ஆட்டோக்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஒரு ஆட்டோ ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அதே ஆட்டோவில் பயணித்த கந்தூர் மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த தாய் கண்ணகி (38) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்ணகியின் மகளான ஜனனி (13) விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Mother, daughter died in accident near by sunguvaarsathiram
ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாதில் உயிரிழந்த தாய் கண்ணகி, மகள் ஜனனி

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற சிறுமி ஜனனி, மேல் சிகிச்சைக்காக பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ஜனனி உயிரிழந்தார். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

மற்றொரு ஆட்டோவை ஓட்டிவந்த திருப்பந்தியூர் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் லட்சுமண குமார் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் தாயும், மகளும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 'எண்ணிக்கையைவிட லட்சியத்திற்குதான் முதலிடம்'

சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சோகண்டி பகுதியிலிருந்து மதுரமங்கலம் செல்லும் செக்போஸ்ட் அருகில் எதிரெதிரே வந்த இரு ஆட்டோக்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஒரு ஆட்டோ ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அதே ஆட்டோவில் பயணித்த கந்தூர் மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த தாய் கண்ணகி (38) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்ணகியின் மகளான ஜனனி (13) விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Mother, daughter died in accident near by sunguvaarsathiram
ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாதில் உயிரிழந்த தாய் கண்ணகி, மகள் ஜனனி

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற சிறுமி ஜனனி, மேல் சிகிச்சைக்காக பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ஜனனி உயிரிழந்தார். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

மற்றொரு ஆட்டோவை ஓட்டிவந்த திருப்பந்தியூர் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் லட்சுமண குமார் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் தாயும், மகளும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 'எண்ணிக்கையைவிட லட்சியத்திற்குதான் முதலிடம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.