உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் குறித்து, காஞ்சிபும் பெருநகராட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து கட்சி பிரதிநிதிகள், நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு, தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளையும், வரைவு வாக்குச் சாவடி குறித்த தங்களின் சந்தேகங்களையும் கேட்டறிந்தனர்.