ETV Bharat / state

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய முன்னாள் எம்.பி. - corona latest news

காஞ்சிபுரம்: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி. பன்னீர்செல்வம் ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார்.

ஒரு லட்சம் வழங்கி காஞ்சி பன்னீர்செல்வம்
ஒரு லட்சம் வழங்கி காஞ்சி பன்னீர்செல்வம்
author img

By

Published : Apr 26, 2020, 12:35 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு இருக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதைத்தொடர்ந்து தன்னார்வலர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் எனப் பலர் தங்களால் முடிந்த உதவிகளை பொதுமக்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து வருகின்றனர்.

ரூ. 1 லட்சம் வழங்கிய காஞ்சி பன்னீர்செல்வம்

அதைத்தொடர்ந்து நேற்று காஞ்சிபுரம் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கினார்.

அதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் நகர நுகர்வோர் பொருள் விநியோகஸ்தர் சங்கம் சார்பில் 60,000 ரூபாய் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் காஞ்சி நகர மன்ற தலைவர் ஆர்.டி. சேகர், மாவட்ட அதிமுக நிர்வாகி தமிழ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை 1200 பேருக்கு வழங்கிய அமைச்சர்!

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு இருக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதைத்தொடர்ந்து தன்னார்வலர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் எனப் பலர் தங்களால் முடிந்த உதவிகளை பொதுமக்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து வருகின்றனர்.

ரூ. 1 லட்சம் வழங்கிய காஞ்சி பன்னீர்செல்வம்

அதைத்தொடர்ந்து நேற்று காஞ்சிபுரம் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கினார்.

அதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் நகர நுகர்வோர் பொருள் விநியோகஸ்தர் சங்கம் சார்பில் 60,000 ரூபாய் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் காஞ்சி நகர மன்ற தலைவர் ஆர்.டி. சேகர், மாவட்ட அதிமுக நிர்வாகி தமிழ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை 1200 பேருக்கு வழங்கிய அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.