ETV Bharat / state

அண்ணா பிறந்த மண்ணில் மருத்துவக் கல்லூரி இல்லையா? - mla ezhilarasan byte

சென்னை: அண்ணா பெயரில் நடக்கும் ஆட்சியில் அண்ணா பிறந்த மண்ணில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அனுமதியை பெறாமல் இருப்பது வருத்தமளிப்பதாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் தெரிவித்தார்.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன்
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன்
author img

By

Published : Feb 2, 2020, 7:37 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும் என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு. அதனை நிறைவேற்றும் வகையில் மக்கள் நல்வாழ்வு துறை இந்தாண்டு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு விண்ணப்பித்தது.

அதன் அடிப்படையில் முதல்கட்டமாக திருப்பூர், நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அதேபோல் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரி உருவாக்குவதற்கு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்தது. அதனை ஏற்றுக்கொண்டு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை மூன்று மாவட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் மாவட்ட அரசு மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு அனுமதி அளித்துள்ளது.

மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், ஏற்கனவே உள்ள கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை ஜனவரி 27ஆம் தேதி கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. ஆனால் கடலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு அனுமதி வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடலூர், காஞ்சிபுரத்தில் வரும் காலத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் கூறியதாவது,

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கண்டிப்பாக மருத்துவக்கல்லூரி வழங்கப்படுமென முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஏற்கனவே அவர் அறிவித்த கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ,அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கேட்டதில் மத்திய அரசு இரண்டு மாவட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன்

சட்டப்பேரவையில் நாங்கள் கேள்வி எழுப்பியபோது, ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் காஞ்சிபுரம் உள்ளதால் அதற்கு வாய்ப்பில்லை என அப்போது கூறப்பட்டது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தை தற்போது தனியாக பிரித்து காஞ்சிபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட பின்னர் கண்டிப்பாக மருத்துவக்கல்லூரி வருமென உறுதியாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

இதையும் படிங்க:'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னது பொய்' - மன உளைச்சலில் சிவகாசி சிறுமியின் குடும்பத்தார்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும் என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு. அதனை நிறைவேற்றும் வகையில் மக்கள் நல்வாழ்வு துறை இந்தாண்டு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு விண்ணப்பித்தது.

அதன் அடிப்படையில் முதல்கட்டமாக திருப்பூர், நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அதேபோல் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரி உருவாக்குவதற்கு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்தது. அதனை ஏற்றுக்கொண்டு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை மூன்று மாவட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் மாவட்ட அரசு மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு அனுமதி அளித்துள்ளது.

மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், ஏற்கனவே உள்ள கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை ஜனவரி 27ஆம் தேதி கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. ஆனால் கடலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு அனுமதி வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடலூர், காஞ்சிபுரத்தில் வரும் காலத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் கூறியதாவது,

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கண்டிப்பாக மருத்துவக்கல்லூரி வழங்கப்படுமென முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஏற்கனவே அவர் அறிவித்த கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ,அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கேட்டதில் மத்திய அரசு இரண்டு மாவட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன்

சட்டப்பேரவையில் நாங்கள் கேள்வி எழுப்பியபோது, ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் காஞ்சிபுரம் உள்ளதால் அதற்கு வாய்ப்பில்லை என அப்போது கூறப்பட்டது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தை தற்போது தனியாக பிரித்து காஞ்சிபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட பின்னர் கண்டிப்பாக மருத்துவக்கல்லூரி வருமென உறுதியாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

இதையும் படிங்க:'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னது பொய்' - மன உளைச்சலில் சிவகாசி சிறுமியின் குடும்பத்தார்

Intro:அண்ணா பெயரில் நடக்கும் ஆட்சியில்

அண்ணா பிறந்த மண்ணில் மருத்துவக் கல்லூரி இல்லையா?


திமுக எம்எல்ஏ எழிலரசன் காட்டம்


Body:அண்ணா பெயரில் நடக்கும் ஆட்சியில்

அண்ணா பிறந்த மண்ணில் மருத்துவக் கல்லூரி இல்லையா?


திமுக எம்எல்ஏ எழிலரசன் காட்டம்



சென்னை,


அண்ணா பெயரில் நடக்கும் ஆட்சியில் அண்ணா பிறந்த மண்ணில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அனுமதியை பெறாமல் இருப்பது வருத்தமளிப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தெரிவித்தார்.




தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு தலா ஒரு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும் என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு இருக்கிறது. அதனை நிறைவேற்றும் வகையில் மக்கள் நல்வாழ்வு துறை இந்தாண்டு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு விண்ணப்பித்தது.

அதனடிப்படையில் முதல்கட்டமாக திருப்பூர், நீலகிரி ,நாமக்கல் ,திண்டுக்கல் ,ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் துவங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதேபோல் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரி உருவாக்குவதற்கு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு தமிழக அரசு விண்ணப்பம் செய்தது. அதனை ஏற்றுக்கொண்டு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை மூன்று மாவட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் மாவட்ட அரசு மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு அனுமதி அளித்துள்ளது.


அதனைத்தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், ஏற்கனவே உள்ள கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்து.


மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை ஜனவரி 27 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் புதிய மருத்துவ கல்லூரிகளை துவங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்த மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, அரியலூர் கள்ளக்குறிச்சி கடலூர் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்து. ஆனால் கடலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு அனுமதி வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் வரும் காலத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிபிஎம் எழிலரசன் கூறியதாவது, செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கண்டிப்பாக மருத்துவக்கல்லூரி வழங்கப்படுமென முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்த கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ,அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கேட்டதில் மத்திய அரசு இரண்டு மாவட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.


சட்டப்பேரவையில் நாங்கள் கேள்வி எழுப்பியபோது, ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் காஞ்சிபுரம் உள்ளதால் அதற்கு வாய்ப்பில்லை என அப்போது கூறப்பட்டது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தை தற்போது தனியாக பிரித்து காஞ்சிபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட பின்னர் கண்டிப்பாக மருத்துவக்கல்லூரி வருமென உறுதியாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

குறிப்பாக ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி காரணம்காட்டி காஞ்சிபுரத்திற்கு வழங்க வேண்டிய நீதி மறுக்கப்படுவது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

மாநிலத்தில் இருக்கும் எடப்பாடி அரசு பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருப்பதாக தான் கருதுகிறேன். பல்வேறு மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வருவேன் என பொய் பிரச்சாரம் செய்யும் அரசாக மட்டுமே இருக்கிறது. செய்வதை விட்டுவிட்டு இல்லாததை எல்லாம் இட்டுக்கட்டி மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து நாங்கள் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்துவிட்டோம். அப்படி அனுமதி பெற்ற கல்லூரிகள் கூட மாணவர் சேர்க்கை இருக்குமா என்றால் இல்லை என்ற பதில்தான் இருக்கிறது.

11 மருத்துவ கல்லூரிகளுக்கும் கட்டமைக்கப்பட்டு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்ற பின்னர் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அரசு மக்களிடம் பொய் பிரச்சாரத்தை செய்துவருகிறது. தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். மத்திய அரசு அளித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்கான திட்ட பணிகளை ஆய்வு மட்டும் தான் மதுரையில் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை ,அதனைக் கேட்டுப் பெற வேண்டிய மாநில அரசும் அதுகுறித்த பணியை மேற்கொள்ளவில்லை. தமிழக மக்களையும் தமிழக மாணவர்கள் பயிலும் வாய்ப்பை பறிக்கும் மத்திய அரசுக்கு துணையாக எடப்பாடி அரசு இருக்கிறது.


காஞ்சிபுரத்திற்கு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகராக 1968 ஆம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் இயங்கி வருகிறது. தலைநகராக உள்ள காஞ்சிபுரத்திற்கு இதுவரை முன்வர வேண்டிய முக்கிய அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் வந்து சேராமல் உள்ளன. இதுகுறித்து ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

சட்டப்பேரவையில் சட்டக்கல்லூரி வேண்டும் என கேட்ட பொழுது செங்கல்பட்டில் ஏற்கனவே சட்டக்கல்லூரி இருக்கிறது. மாவட்டம் பிரிக்கப்பட்ட காஞ்சிபுரத்தில் கொண்டு வரப்படும் என தெரிவித்தனர். அதேபோல் மருத்துவக்கல்லூரி வேண்டுமென மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை வைத்த போதும் இதுபோன்ற பதில்தான் தெரிவித்தனர். செங்கல்பட்டில் ஒரு மருத்துவக்கல்லூரி இருக்கிறது எனவே காஞ்சிபுரத்தில் அமையாது என கூறப்பட்டது.

ஆனால் தற்பொழுது மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னரும் காஞ்சிபுரத்திற்கு வரவேண்டிய அரசு சட்ட கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி, கலை-அறிவியல் கல்லூரிகள் எதுவும் வரவில்லை. அதேபோல் முக்கிய துறைகளின் அலுவலகங்கள் எதுவும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரவில்லை எனவே இது குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் கலந்துபேசி விரைவில் போராட்டத்தினை அறிவிக்க உள்ளோம் என தெரிவித்தார்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.