ETV Bharat / state

புலவர் நல்லூர் நத்தத்தனாருக்கு மரியாதை செலுத்திய அரசு ஊழியர்கள் - நல்லூர் நத்தத்தனார்

காஞ்சிபுரம்: சங்ககாலப் புலவர் நல்லூர் நத்தத்தனாரின் நினைவு தூணிற்கு அரசு ஊழியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புலவர் நல்லூர் நத்தத்தனாரின் நினைவுத் தூண்
author img

By

Published : Apr 29, 2019, 10:32 PM IST

காஞ்சிபுரம், அருகே செய்யூர் கிராமத்தில் சங்ககாலப் புலவர்களில் ஒருவரான நல்லூர் நத்தத்தனாரின் நினைவாகத் தூண் ஒன்று அமைந்துள்ளது.

வருடந்தோறும், அரசு ஊழியர்கள் இந்த தூணிற்கு மாலை அணிவித்து, தமிழ் கவிஞர் நாளாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்காக தமிழ் கவிஞர் நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், அரசு ஊழியர்கள் நல்லூர் நத்தத்தனாரின் நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

புலவர் நல்லூர் நத்தத்தனாரின் நினைவுத் தூண்

பின்னர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவர் ஈடிவி பாரத்திடம் அளித்த பேட்டியில், "பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்று சங்க இலக்கியங்களில் ஒன்றான சிறுபாணாட்டுப் படை நூலை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் என்றும், அவர் இடைக்கிழைநாடு நல்லூரில் பிறந்தவர்.

மேலும், சுமார் இரண்டாயிரம் வருடங்களாக இடைக்கழி நாட்டு நல்லூர் பகுதியானது பெயர் மாற்றமின்றி வழக்கத்தில் இருந்து வருகிறது" என்றார்.

காஞ்சிபுரம், அருகே செய்யூர் கிராமத்தில் சங்ககாலப் புலவர்களில் ஒருவரான நல்லூர் நத்தத்தனாரின் நினைவாகத் தூண் ஒன்று அமைந்துள்ளது.

வருடந்தோறும், அரசு ஊழியர்கள் இந்த தூணிற்கு மாலை அணிவித்து, தமிழ் கவிஞர் நாளாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்காக தமிழ் கவிஞர் நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், அரசு ஊழியர்கள் நல்லூர் நத்தத்தனாரின் நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

புலவர் நல்லூர் நத்தத்தனாரின் நினைவுத் தூண்

பின்னர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவர் ஈடிவி பாரத்திடம் அளித்த பேட்டியில், "பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்று சங்க இலக்கியங்களில் ஒன்றான சிறுபாணாட்டுப் படை நூலை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் என்றும், அவர் இடைக்கிழைநாடு நல்லூரில் பிறந்தவர்.

மேலும், சுமார் இரண்டாயிரம் வருடங்களாக இடைக்கழி நாட்டு நல்லூர் பகுதியானது பெயர் மாற்றமின்றி வழக்கத்தில் இருந்து வருகிறது" என்றார்.

Intro:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யுறு க்கு அருகில் அமைந்துள்ள நல்லூர் என்ற கிராமத்தில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்ககாலப் புலவர்களில் ஒருவர் தான் நல்லூர் நத்தத்தனார் அவர்கள் .
அவரது நினைவாக அப்பகுதியில் ஒரு தூண் அமைத்து அவருக்கு கோவிலும் அமைத்து வருடந்தோறும் அரசு ஊழியர்களால் வழிபட்டு சிறப்பித்து வருகின்றது.


Body:காஞ்சிபுரம் மாவட்டம் அருகே செய்யூர் என்கின்ற கிராமத்தில் சங்ககாலப் புலவர்களில் ஒருவரான நல்லூர் நத்தத்தனார் அவர்களின் நினைவாக தூண் ஒன்று அமைத்து அதை வருடந்தோறும் அரசு ஊழியர்கள் தமிழ் கவிஞர் நாளாக கொண்டாடி வருகின்றனர்.
அதை சிறப்பிக்கும் வண்ணமாக இன்று தமிழ் கவிஞர் நாள் முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நல்லூர் நத்தத்தனார் அவர்களின் நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
" தமிழகத்திலே குட்டி கேரளா என்று அழைக்கப்படும் இடைக்கழி நாடு என்கின்ற ஒரு கிராமம் இவை 32 கிலோமீட்டர் தூரம் கொண்டவை இதனுள் 28 கிராமங்கள் அடங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய கிராமமாக திகழ்கிறது ".
இந்த இடைக்கழிநாடு இந்த இடைக்கழி நாடு என்கின்ற பெயர் சங்க காலத்தில் புலவர்கள் வைக்கப்பட்ட பெயர் இன்னும் இந்தப் பெயரே அக் கிராமத்திற்கு வைத்து சிறப்பித்து வருகின்றனர்.
இவ்விழாவில் எக்ஸ் என் சி ராஜா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.


Conclusion:இவ்விழாவானது இந்த வருடத்தைக் காட்டிலும் அடுத்த வருடம் தமிழகம் முழுவதும் தெரியும் படி பெரிய அளவில் சிறப்பிக்க வேண்டும் என்றும் அதற்கு அரசு ஊழியர்களும் பொதுமக்களும் பெரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்று தமிழ் வளர்ச்சித் துறை ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.