ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் கைச்சிலம்பம் ஆடி பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பு

author img

By

Published : Mar 30, 2021, 2:36 PM IST

காஞ்சிபுரம் ஒன்றியம் தேனம்பாக்கம் பகுதிகளில் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் கைச்சிலம்பம் ஆடி பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

அமைச்சர் வி.சோமசுந்தரம் கைச்சிலம்பம் ஆடி பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பு
அமைச்சர் வி.சோமசுந்தரம் கைச்சிலம்பம் ஆடி பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் உத்திரமேரூர் தொகுதிக்குள்பட்ட காஞ்சிபுரம் ஒன்றியம் ஐஞ்சூர், தேனம்பாக்கம், காமாட்சி நகர், அண்ணா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

வி. சோமசுந்தரம் கைச்சிலம்பம் ஆடி பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பு
அப்போது, தேனம்பாக்கம் மேலத்தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் கைச்சிலம்பம் ஆடி அப்பகுதி மக்களிடம் வாக்குச் சேகரித்தார். மேலும், அதே பகுதியில் மிகப்பெரிய ரங்கோலி கோலத்தில் வேட்பாளரின் பெயர், இரட்டை இலைச் சின்னம் வரையப்பட்டு அதிமுக கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பிரமாண்ட கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வின்போது அதிமுக கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சி மேற்கு ஒன்றியச் செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சியினரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஏராளமான பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும், நடனக்குழுவினர் நடனமாடியும் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் உத்திரமேரூர் தொகுதிக்குள்பட்ட காஞ்சிபுரம் ஒன்றியம் ஐஞ்சூர், தேனம்பாக்கம், காமாட்சி நகர், அண்ணா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

வி. சோமசுந்தரம் கைச்சிலம்பம் ஆடி பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பு
அப்போது, தேனம்பாக்கம் மேலத்தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் கைச்சிலம்பம் ஆடி அப்பகுதி மக்களிடம் வாக்குச் சேகரித்தார். மேலும், அதே பகுதியில் மிகப்பெரிய ரங்கோலி கோலத்தில் வேட்பாளரின் பெயர், இரட்டை இலைச் சின்னம் வரையப்பட்டு அதிமுக கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பிரமாண்ட கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வின்போது அதிமுக கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சி மேற்கு ஒன்றியச் செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சியினரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஏராளமான பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும், நடனக்குழுவினர் நடனமாடியும் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.