ETV Bharat / state

6 மாவட்ட ஆட்சியர்கள் உடன் தேர்தல் ஆணைய தலைமை அலுவலர் கலந்தாய்வுக் கூட்டம் - Election Commission chief executive meeting

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆறு மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

Election Commission chief executive meeting
author img

By

Published : Nov 21, 2019, 3:11 AM IST

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி பல்வேறு ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முதற்கட்டமாக அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தல் குறித்த வரைவுகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டன.

இந்த நேரத்தில் மாவட்டங்கள் தோறும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதால், காஞ்சிபுரத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார்.

6 மாவட்ட ஆட்சியர்கள் உடன் தேர்தல் ஆணைய தலைமை அலுவலர் கலந்தாய்வுக் கூட்டம்

இதில் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, நடந்துமுடிந்த தேர்தல்கள் நமக்கு பல்வேறு அனுபவங்களைத் தந்த போதும், உள்ளாட்சித் தேர்தல் என்பது மிகக் கவனத்தில்கொள்ள வேண்டிய ஒரு தேர்தலாகும். எனவே, இதைத் திறம்பட அனைத்து தேர்தல் அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும். இது குறித்த சந்தேகங்கள் ஏற்படும் நிலையில் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அதனைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி பல்வேறு ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முதற்கட்டமாக அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தல் குறித்த வரைவுகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டன.

இந்த நேரத்தில் மாவட்டங்கள் தோறும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதால், காஞ்சிபுரத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார்.

6 மாவட்ட ஆட்சியர்கள் உடன் தேர்தல் ஆணைய தலைமை அலுவலர் கலந்தாய்வுக் கூட்டம்

இதில் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, நடந்துமுடிந்த தேர்தல்கள் நமக்கு பல்வேறு அனுபவங்களைத் தந்த போதும், உள்ளாட்சித் தேர்தல் என்பது மிகக் கவனத்தில்கொள்ள வேண்டிய ஒரு தேர்தலாகும். எனவே, இதைத் திறம்பட அனைத்து தேர்தல் அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும். இது குறித்த சந்தேகங்கள் ஏற்படும் நிலையில் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அதனைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Intro:காஞ்சிபுரம். 20.11.2019

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி 6 மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்

Body:தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி பல்வேறு ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.. முதற்கட்டமாக கடந்த மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் குறித்த வரைவுகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது..

இந்த நிலையில் மாவட்டங்கள் தோறும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் மாநில தேர்தல் ஆணையர் திரு பழனிச்சாமி தலைமையில் காஞ்சிபுரம் வேலூர் திருப்பத்தூர் திருவள்ளூர் ராணிப்பேட்டை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.. இதில் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கடந்த தேர்தல்கள் நமக்கு பல்வேறு அனுபவங்களை தந்த போதும் உள்ளாட்சி தேர்தல் என்பது மிக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு செயலாகும் எனவும் இதை திறன்பட அனைத்து தேர்தல் அலுவலர்களும் அதிகாரிகளும் மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ள வேண்டும் எனவும் இது குறித்த சந்தேகங்கள் ஏற்படும் நிலையில் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அதனை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்..

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதர்ஷினி திருப்பத்தூர் ஆட்சியர் சிவன்அருள் வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் மாவட்ட துறை சார்ந்த முக்கிய அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.. Conclusion:காலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களும் மாலையில் ஊராட்சி தேர்தல் அலுவலர்களும் பங்குபெறும் கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.