நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் என்பவர், தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவிடத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, ராஜிவ் நினைவு தூண் அருகே சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசிய கருத்துகளை டிக்-டாக் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதுசம்பந்தமாக காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திட வேண்டுமென புகார் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தலில் வெற்றிபெற இந்திய ராணுவ வீரர்களை பாஜக அரசு கொன்றது - சீமான் குற்றச்சாட்டு