ETV Bharat / state

புதிய மாவட்டம் செங்கல்பட்டு! ஏற்பாடுகள் தீவிரம்! - செங்கல்பட்டு புதிய மாவட்டம்

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

chengalpattu new district opening function
புதிய மாவட்டம் செங்கல்பட்டு
author img

By

Published : Nov 28, 2019, 11:54 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து புதிதாகப் பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினர்களாக வருகை தர உள்ளதால் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முதல்முறையாக எல்இடி நீண்ட திரையும், ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவில் மேடை, கண்காட்சிக்கான கூடாரங்கள், 30 அடியில் கட்டவுட் ஆகியன வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி நலத்திட்ட உதவிகளாக வாகனங்கள், விவசாயிகளுக்கு ஏர் உழும் இயந்திரம், மகளிருக்கு இருசக்கர வாகனங்களும் வழங்கப்படவுள்ளன. நாளை நடக்க இருக்கும் விழாவிற்குப் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தொடக்க விழா பணிகள் துரிதம்

இன்று நடைபெற்ற பணிகளைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், அதிமுக மாவட்ட - ஒன்றிய நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

ஜெயம் மருத்துவமனை செய்த காரியம்... இருமலுக்கு ஊசி போட்ட மருத்துவர்! எப்படி நிகழ்ந்தது மரணம்?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து புதிதாகப் பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினர்களாக வருகை தர உள்ளதால் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முதல்முறையாக எல்இடி நீண்ட திரையும், ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவில் மேடை, கண்காட்சிக்கான கூடாரங்கள், 30 அடியில் கட்டவுட் ஆகியன வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி நலத்திட்ட உதவிகளாக வாகனங்கள், விவசாயிகளுக்கு ஏர் உழும் இயந்திரம், மகளிருக்கு இருசக்கர வாகனங்களும் வழங்கப்படவுள்ளன. நாளை நடக்க இருக்கும் விழாவிற்குப் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தொடக்க விழா பணிகள் துரிதம்

இன்று நடைபெற்ற பணிகளைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், அதிமுக மாவட்ட - ஒன்றிய நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

ஜெயம் மருத்துவமனை செய்த காரியம்... இருமலுக்கு ஊசி போட்ட மருத்துவர்! எப்படி நிகழ்ந்தது மரணம்?

Intro:காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்படும் செங்கல்பட்டு மாவட்டம் துவக்க விழா நாளை செங்கல்பட்டில் நடைபெற உள்ளது நடைபெற உள்ளது இவ் விழாவிற்கு தமிழக முதல்வர் வருகை தர உள்ளதால் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டு நடைபெற்றுவருகின்றன இதனை இன்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மேற்பார்வையிட்டார்


Body:காஞ்சிபுரம் மாவட்டம் அருகே செங்கல்பட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்படும் செங்கல்பட்டு மாவட்டம் துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை நடைபெற உள்ளது இவ்விழாவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளதால் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதல்முறையாக எல்இடி திரை கொண்ட நீண்ட திரையும் மற்றும் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவில் மேடையும் கண்காட்சிக்கான கூடாரங்களும் 30 அடியில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான வாகனங்கள் விவசாயிகளுக்கு ஏர் உழுத இயந்திரம் மற்றும் மகளிருக்கு இருசக்கர வாகனங்களும் வழங்கப்படவுள்ளன நாளை நடக்க இருக்கும் விழாவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது


Conclusion:இன்று நடைபெற்று இருக்கும் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் அதிமுக மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மேற்பார்வை விட்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.