ETV Bharat / state

நாளை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார்!

காஞ்சிபுரம்: அத்திவரதர் நாளையிலிருந்து 17ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சியளிக்கவுள்ளார்.

author img

By

Published : Jul 31, 2019, 9:30 PM IST

athivaradhar

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் காட்சியளிப்பார். அதனைத் தொடர்ந்து இந்த வருடம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய சாமி தரிசனம் இன்று வரை தொடர்ந்தது. ஜூலை 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் நாளை முதல் 17ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். இது தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதையடுத்து இன்று மதியம் 12 மணிக்கு பொதுமக்கள் தரிசனம் செய்யும் கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்பட்டது.

பின்னர், கோயிலில் மிக சொற்பமான பக்தர்கள் இருந்ததால் காவல் துறையினர், பக்தர்கள் அனைவரையும் அழைத்து சாமி தரிசனம் செய்ய அனுப்பினார்கள். கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இல்லை என்பதால் அனைவரும் ஐந்து நிமிடத்தில் சாமியை தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டனர்.

நாளை முதல் அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார்!

மேலும், 2059ஆம் ஆண்டில்தான் இதற்கு பிறகு அத்திவரதர் காட்சியளிப்பார் என்பதால் பக்தர்கள் பலர் காஞ்சிபுரத்தில் குவிந்துள்ளனர். பல லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரைக் காண குவிந்த வண்ணம் உள்ளனர். சயன கோலத்தில் சாமியை தரிசனம் செய்தவர்கள்கூட நின்ற கோலத்தில் அத்திவரதரை காண ஆவலுடன் உள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் காட்சியளிப்பார். அதனைத் தொடர்ந்து இந்த வருடம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய சாமி தரிசனம் இன்று வரை தொடர்ந்தது. ஜூலை 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் நாளை முதல் 17ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். இது தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதையடுத்து இன்று மதியம் 12 மணிக்கு பொதுமக்கள் தரிசனம் செய்யும் கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்பட்டது.

பின்னர், கோயிலில் மிக சொற்பமான பக்தர்கள் இருந்ததால் காவல் துறையினர், பக்தர்கள் அனைவரையும் அழைத்து சாமி தரிசனம் செய்ய அனுப்பினார்கள். கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இல்லை என்பதால் அனைவரும் ஐந்து நிமிடத்தில் சாமியை தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டனர்.

நாளை முதல் அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார்!

மேலும், 2059ஆம் ஆண்டில்தான் இதற்கு பிறகு அத்திவரதர் காட்சியளிப்பார் என்பதால் பக்தர்கள் பலர் காஞ்சிபுரத்தில் குவிந்துள்ளனர். பல லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரைக் காண குவிந்த வண்ணம் உள்ளனர். சயன கோலத்தில் சாமியை தரிசனம் செய்தவர்கள்கூட நின்ற கோலத்தில் அத்திவரதரை காண ஆவலுடன் உள்ளனர்.

Intro:அத்தி வரதர் கோவில் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பின்படி 12 .மணிக்கு அடைக்கப்பட்டு கோயிலின் உள்ளே பக்தர்கள் குறைவாக இருந்ததால் தற்போது ஐந்து நிமிடத்தில் தரிசனம் செய்யப்பட்டது.


Body:அத்தி வரதர் ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளிப்பார் என்றும் நாளை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று இரவு அத்திவரதர் சயன கோலத்தில் இருந்து நின்ற கோலத்தில் காட்சி அளிக்க ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் இன்று மதியம் 12 மணிக்கு பொதுமக்கள் தரிசனம் செய்யும் கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்படும். என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது அதன்படி 12 மணி அளவில் கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்பட்டது. கோவிலின் உள்ளே மிக சொற்பமாக பக்தர்கள் இருந்ததால் மீண்டும் கோவில் வாசல் திறக்கப்பட்டு மிக குறைவாக இருந்த பக்தர்களை காவல்துறையினர் கூவி கூவி அழைத்து உள்ளே அனுப்பினார்கள் .அவ்வாறு சென்றவர்கள் ஐந்து நிமிடத்தில் சுவாமி தரிசனம் செய்தனர் பல லட்சக்கணக்கான இதுவரை சுவாமி இரண்டு மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்த நிலை மாறி தற்போது ஐந்து நிமிடத்திலேயே மிக குறைவான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் கோவிலுக்குள்ளே முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. தரிசன முறையில் மாற்றம் இதற்கான ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் பக்தர்களின் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .இதையடுத்து கோவிலின் கிழக்கு வாசல் இன்று மதியம் 12 மணியுடன் மூடப்பட்டது இதேபோல் முக்கிய பிரமுகர்கள் மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் மதியம் மூன்று மணிக்கு பின்னர் முக்கிய பிரமுகர்கள் பொது தரிசன பாதையில் செல்லக் கூடியவர்கள் கோவிலுக்குள் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது மாலை 5 மணிக்குப் பின்னர் சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதர் சிலைக்கு பூஜைகள் செய்து நின்ற கோலத்தில் வைக்கிறார்கள் .சிறப்பு அலங்காரம் பூஜைகள் முடிய சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளன நாளை காலை 5 மணி முதல் அத்திவரதரை நின்ற கோலத்தில் வழக்கம்போல் பக்தர்கள் தரிசிக்கலாம் அத்திவரதரை நின்ற கோலத்தில் முதல்நாள் தரிசிப்பதற்காக காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள் அங்குள்ள லாட்ஜிகளில் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பிவிட்டன. விழாவின் 31 வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் நிற ஆடைகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் அத்திவரதரை இன்று மதியம் வரை மட்டுமே சயன கோலத்தில் காண முடியும் இதன் பிறகு அடுத்த 40 ஆண்டுகள் கழித்து 2059 ஆம் ஆண்டில் தான் அத்திவரதரை சயன கோலத்தில் காண முடியும் என்பதால் காஞ்சிபுரம் நகரில் இன்று கட்டுக்கடங்கா பக்தர்கள் குவிந்தனர் ஆனால் 12 மணிக்கு நடை சாத்தப்படும் என்று மக்களுக்கு தெரிவிக்கப்பட்டதால் .கோயிலின் அருகே ஒருத்தர் கூட வரவில்லை இதனால் காவல்துறை கூவி கூவி அழைத்து உள்ளே ஆட்களை அனுப்பினார்கள் இதனால் சாமியை ஐந்து நிமிடத்தில் அவர்கள் தரிசனம் செய்தார்கள். etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.