ETV Bharat / state

கார் விபத்தில் சிதறிய ரூ.69 லட்சங்கள்! - 69 லட்ச பணத்துடன் நேர்ந்த விபத்து

காஞ்சிபுரம்: 69 லட்ச ரூபாய் பணத்துடன் மூன்று பேர் வந்த சொகுசுக் கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார், படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

69 லட்ச பணத்துடன் நேர்ந்த விபத்து
author img

By

Published : Jun 17, 2019, 12:16 PM IST

சென்னையைச் சேர்ந்த இரும்பு வியாபாரிகள் முரளி, பாலாஜி, சரவணன் ஆகியோர் வேலூரில் வியாபாரிகளிடம் வசூல் செய்த ரூ. 69 லட்சம் பணத்துடன் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தை அடுத்த சின்னையன் சத்திரத்திரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முரளி சம்பவ இடத்திலேயே பலியானார் மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தினர் உயிருக்குப் போராடிய இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர்கள் கொண்டுவந்த பணத்தையும் கைபற்றி பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.

பல லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டுவந்தபோது வாகனம் விபத்துக்குள்ளானது தற்செயலா? அல்லது பணத்தைப் பறித்துச் செல்ல யாரேனும் செய்த சதிச் செயலா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மதுரையிலிருந்து வந்த வாகனத்தைப் பின் தொடர்ந்துவந்து விபத்தை ஏற்படுத்தி பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையைச் சேர்ந்த இரும்பு வியாபாரிகள் முரளி, பாலாஜி, சரவணன் ஆகியோர் வேலூரில் வியாபாரிகளிடம் வசூல் செய்த ரூ. 69 லட்சம் பணத்துடன் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தை அடுத்த சின்னையன் சத்திரத்திரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முரளி சம்பவ இடத்திலேயே பலியானார் மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தினர் உயிருக்குப் போராடிய இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர்கள் கொண்டுவந்த பணத்தையும் கைபற்றி பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.

பல லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டுவந்தபோது வாகனம் விபத்துக்குள்ளானது தற்செயலா? அல்லது பணத்தைப் பறித்துச் செல்ல யாரேனும் செய்த சதிச் செயலா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மதுரையிலிருந்து வந்த வாகனத்தைப் பின் தொடர்ந்துவந்து விபத்தை ஏற்படுத்தி பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:காஞ்சிபுரம்
15-06-2019


காஞ்சிபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.

ஒருவர் பலி,
69 லட்ச ரூபாய் பணத்துடன் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவ மனையில் அனுமதி.

சென்னையைச் சேர்ந்த இரும்பு வியாபாரிகள் முரளி, பாலாஜி, சரவணன் ஆகியோர் வேலூர் சென்று வியாபாரிகளிடமிருந்து வசூல் செய்த 69 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய
நெடுஞ்சாலை
சின்னையன் சத்திரத்தில் வேலூரில் இருந்து சென்னைக்கு வந்த கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கார் கவிழ்ந்து சாலை ஓர சுவற்றில் மோதி விபத்திற்குள்ளானது.
விபத்தில் முரளி சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் பல லட்சம் ரூபாய் பணத்துடன் பயணம் செய்த பாலாஜி, சரவணன் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பாலாஜி சரவணன் ஆகிய இருவரையும் பல லட்ச ரூபாய் பணத்துடன் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களின் கொண்டு வந்த பணத்தையும் கைபற்றி பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.

மேலும் 69 லட்ச ரூபாய் பணத்துடன் வந்தவர்கள் கார் விபத்துக்குள்ளானது தற்செயலா? அல்லது பணத்தை பறித்து செல்ல யாரேனும் செய்த சதி செயலா? என காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாதம் இதேபோல் காஞ்சிபுரம் அருகே மதுரையில் இருந்து பின் தொடர்ந்து வந்து பணத்தை திருடுவதற்காக விபத்து ஏற்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.