காஞ்சிபுரம் மாவட்டம் தும்பவனம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பூர்ணி (15), ஜெயஸ்ரீ (14), லட்சுமி (15). இந்த சிறுமிகள் குருவிமலை அருகேயுள்ள பாலாற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது சிறுமிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர். தற்போது காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி மாயமான மூன்று சிறுமிகளை தேடி வருகின்றனர்.
மேலும், இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்த நிலையில் பெண்குழந்தை கண்டெடுப்பு!