ETV Bharat / state

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: காதல் விவகாரமா? போலீஸ் விசாரணை!

கள்ளக்குறிச்சி: எம்ஜிஆர் நகரில் திருமணமாகி 15 நாள்களே ஆன இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. காதல் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

author img

By

Published : Dec 1, 2020, 7:36 AM IST

திருமணமாகி 15 நாள்களே ஆன இளைஞருக்கு அரிவாள் வெட்டு
திருமணமாகி 15 நாள்களே ஆன இளைஞருக்கு அரிவாள் வெட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரியாஸ். இவர் துபாயில் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் தன்னுடைய திருமணத்திற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் துபாயிலிருந்து வந்த ரியாஸுக்கு, கடந்த 15 நாள்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், ரியாஸ் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பெண்ணை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரியாஸுக்கு திருமணம் நடைபெறுவதைத் தெரிந்துகொண்ட அப்பெண், ரியாஸ் அகமது வீட்டிற்குச் சென்று, “என்னை காதலித்துவிட்டு எப்படி வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறாய் பார்ப்போம்” என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இருந்தபோதிலும், தனது திருமணத்தை முடித்த ரியாஸ், திருமணமாகி 15 நாள்களாக வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்த வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (நவ. 30) மாலை தனது இருசக்கர வாகனத்தில் தேநீர் அருந்துவதற்காக, கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சுமார் 8 மணியளவில் மக்கள் போக்குவரத்து அதிகம் நிறைந்த சேலம் முக்கியச் சாலையில், மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ரியாஸை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த ரியாஸ் தப்பியோட முயன்றார். ரியாஸை பின்தொடர்ந்து வந்த அந்த கும்பல் அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரியாஸை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரியாஸ் காதலித்ததாக கூறி ஒரு பெண் மிரட்டல் விடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பெண் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 9 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு... 4 பேருக்கு ஆயுள்: ராணிப்பேட்டை நீதிமன்றம் அதிரடி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரியாஸ். இவர் துபாயில் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் தன்னுடைய திருமணத்திற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் துபாயிலிருந்து வந்த ரியாஸுக்கு, கடந்த 15 நாள்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், ரியாஸ் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பெண்ணை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரியாஸுக்கு திருமணம் நடைபெறுவதைத் தெரிந்துகொண்ட அப்பெண், ரியாஸ் அகமது வீட்டிற்குச் சென்று, “என்னை காதலித்துவிட்டு எப்படி வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறாய் பார்ப்போம்” என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இருந்தபோதிலும், தனது திருமணத்தை முடித்த ரியாஸ், திருமணமாகி 15 நாள்களாக வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்த வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (நவ. 30) மாலை தனது இருசக்கர வாகனத்தில் தேநீர் அருந்துவதற்காக, கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சுமார் 8 மணியளவில் மக்கள் போக்குவரத்து அதிகம் நிறைந்த சேலம் முக்கியச் சாலையில், மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ரியாஸை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த ரியாஸ் தப்பியோட முயன்றார். ரியாஸை பின்தொடர்ந்து வந்த அந்த கும்பல் அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரியாஸை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரியாஸ் காதலித்ததாக கூறி ஒரு பெண் மிரட்டல் விடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பெண் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 9 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு... 4 பேருக்கு ஆயுள்: ராணிப்பேட்டை நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.