ETV Bharat / state

அழுகையுடன் நிறைவு பெற்றது கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா! - koothandavar festival completed

கூத்தாண்டவர் திருவிழா
கூத்தாண்டவர் திருவிழா
author img

By

Published : Apr 21, 2022, 7:11 AM IST

Updated : Apr 21, 2022, 8:06 AM IST

06:22 April 21

கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்திற்கு பின் திருநங்கைகள் விதவை கோலத்துடன் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

கள்ளக்குறிச்சி: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (ஏப்.19) விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஏராளமான திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து திருநங்கைகள் விடிய விடிய ஆடிப்பாடி உற்சாகமாக இருந்தனர். இந்த நிலையில் நேற்று (ஏப்.20) காலை பிரமாண்ட தேரில் அரவானின் சிரசம் வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

பின்னர் அருகில் உள்ள அழிகளம் நோக்கி அரவான் சிரசம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு களப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருநங்கைகள் தங்களது தாலிகளை அறுத்து வெள்ளைப் புடவை உடுத்தி ஒப்பாரி பாடல்களை பாடினர்.

ஆடல், பாடல், அழகிப்போட்டி என களைகட்டிய கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா அழுகையுடன் நிறைவு பெற்றது. திருநங்கைகள் தங்கள் சக தோழிகளிடம் பிரியா விடைபெற்று சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர்.

இதையும் படிங்க: Video: சித்திரைத் திருவிழா: அட்சயலிங்க சுவாமி திருக்கோயிலில் தெப்ப உற்சவம்

06:22 April 21

கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்திற்கு பின் திருநங்கைகள் விதவை கோலத்துடன் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

கள்ளக்குறிச்சி: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (ஏப்.19) விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஏராளமான திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து திருநங்கைகள் விடிய விடிய ஆடிப்பாடி உற்சாகமாக இருந்தனர். இந்த நிலையில் நேற்று (ஏப்.20) காலை பிரமாண்ட தேரில் அரவானின் சிரசம் வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

பின்னர் அருகில் உள்ள அழிகளம் நோக்கி அரவான் சிரசம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு களப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருநங்கைகள் தங்களது தாலிகளை அறுத்து வெள்ளைப் புடவை உடுத்தி ஒப்பாரி பாடல்களை பாடினர்.

ஆடல், பாடல், அழகிப்போட்டி என களைகட்டிய கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா அழுகையுடன் நிறைவு பெற்றது. திருநங்கைகள் தங்கள் சக தோழிகளிடம் பிரியா விடைபெற்று சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர்.

இதையும் படிங்க: Video: சித்திரைத் திருவிழா: அட்சயலிங்க சுவாமி திருக்கோயிலில் தெப்ப உற்சவம்

Last Updated : Apr 21, 2022, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.