ETV Bharat / state

தோட்டக்கலைத் துறையின் உதவியால் வெங்காய விளைச்சலில் நல்ல லாபம் ஈட்டும் தம்பதி

author img

By

Published : Oct 31, 2020, 3:50 PM IST

தோட்டக்கலைத் துறையின் உதவியால் வெங்காய விளைச்சலில் நல்ல லாபம் ஈட்டிவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ஜோஸ்பின் மேரி ஆரோக்கியதாஸ் தம்பதியினர் குறித்த செய்தித்தொகுப்பு.

kallakurichi onion farming
தோட்டக்கலை துறையின் உதவியால் வெங்காய விளைச்சலில் நல்ல லாபம் ஈட்டும் தம்பதியினர்

கள்ளக்குறிச்சியில் பெரும்பாலான விவசாயிகள், கரும்பு, பருத்தி, மக்கா, மஞ்சள், வெங்காயம் போன்ற பயிர்களை அதிகம் விளைவிப்பார்கள். சில விவசாயிகள் ஊடு பயிர்களையும் நட்டுவைத்து நல்ல விளைச்சலைப் பெறுவார்கள். இந்தச் சூழ்நிலையில், தோட்டக்கலைத் துறை உதவியுடன் வெங்காய விளைச்சலில் ஈடுபட்ட நல்ல வருமானத்தை ஈட்டியிருக்கின்றனர் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ஜோஸ்பின் மேரி ஆரோக்கியதாஸ் தம்பதியினர்.

முதலில், தங்களது இரண்டு ஏக்கர் நிலத்தில் வெங்காயத்தினை விதையாக வாங்கி நடவு செய்துள்ளனர். ஆனால், அது அவர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டித்தரவில்லை. மாறாக அதிக செலவுகளை கொடுத்துள்ளது.

ஆகையால், தோட்டக்கலைத் துறையிடமிருந்து இவர்கள், வெங்காய நாற்றினை வாங்கி 45 நாட்கள் வளரச்செய்து பின்னர் அதனை நிலத்தில் நடவு செய்துள்ளனர். இது நல்ல பலனை கொடுத்துள்ளதாக ஆரோக்கியதாஸ், ஜோஸ்பின் மேரி தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.

kallakurichi onion farming
வெங்காய நடவில் ஈடுபட்டுள்ள ஜோஸ்பின்மேரி

ஒரு கிலோ வெங்காய விதை 40 முதல் 50 ரூபாய் வரை இருக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் வெங்காயம் நடவு செய்வதற்கு ஆயிரத்து 500 கிலோ தேவைப்படும். இதனால், 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை தங்களுக்குச் செலவாகும் எனக்கூறும் ஆரோக்கியதாஸ், தோட்டக்கலையிடம் நாற்றினை பெற்று சொட்டுநீர் பாசனம் மூலம் செய்யப்படும் வெங்காய சாகுபடியில் நல்ல வருமானம் வருவதாக கூறுகிறார்.

ஒரு ஏக்கருக்கு 6 முதல் 7 டன் அளவிலான வெங்காயத்தை விளைச்சலாகப் பெறும் இவர், முறையான பராமரிப்பு இருந்தால் 75 நாளிலே ஏக்கரில் 2.50 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டலாம் என்கின்றார். மேலும், ஆரோக்கியதாஸ் மஞ்சள் பயிரிடும்போது வெங்காயத்திற்கு நடுவே மஞ்சளை பயிர் செய்திருப்பதால், இரட்டிப்பு லாபத்தை பெற்றுவருகிறார்.

kallakurichi onion farming
கள்ளக்குறிச்சி தோட்டக்கலை உதவி இயக்குநர்

இது குறித்து கள்ளக்குறிச்சி தோட்டக்கலை உதவி இயக்குநர் வாமலை பேசும்போது, "தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் வெங்காய சாகுபடிக்கு ஆரோக்கியதாஸுக்கு மானியம் வழங்கியுள்ளோம். வெங்காய நாற்றினை நாங்கள் வழங்குவதால், வெங்காய விதை வாங்கும் செலவு விவசாயிகளுக்கு பெருமளவு குறைகிறது.

வெங்காய சாகுபடி தவிர்த்து மற்ற காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கிவருகிறோம். இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்குகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: சிப்பி அலங்காரம், கடல்பாசி வளர்ப்பு என அசத்தும் ராமநாதபுரம் பெண்மணி

கள்ளக்குறிச்சியில் பெரும்பாலான விவசாயிகள், கரும்பு, பருத்தி, மக்கா, மஞ்சள், வெங்காயம் போன்ற பயிர்களை அதிகம் விளைவிப்பார்கள். சில விவசாயிகள் ஊடு பயிர்களையும் நட்டுவைத்து நல்ல விளைச்சலைப் பெறுவார்கள். இந்தச் சூழ்நிலையில், தோட்டக்கலைத் துறை உதவியுடன் வெங்காய விளைச்சலில் ஈடுபட்ட நல்ல வருமானத்தை ஈட்டியிருக்கின்றனர் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ஜோஸ்பின் மேரி ஆரோக்கியதாஸ் தம்பதியினர்.

முதலில், தங்களது இரண்டு ஏக்கர் நிலத்தில் வெங்காயத்தினை விதையாக வாங்கி நடவு செய்துள்ளனர். ஆனால், அது அவர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டித்தரவில்லை. மாறாக அதிக செலவுகளை கொடுத்துள்ளது.

ஆகையால், தோட்டக்கலைத் துறையிடமிருந்து இவர்கள், வெங்காய நாற்றினை வாங்கி 45 நாட்கள் வளரச்செய்து பின்னர் அதனை நிலத்தில் நடவு செய்துள்ளனர். இது நல்ல பலனை கொடுத்துள்ளதாக ஆரோக்கியதாஸ், ஜோஸ்பின் மேரி தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.

kallakurichi onion farming
வெங்காய நடவில் ஈடுபட்டுள்ள ஜோஸ்பின்மேரி

ஒரு கிலோ வெங்காய விதை 40 முதல் 50 ரூபாய் வரை இருக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் வெங்காயம் நடவு செய்வதற்கு ஆயிரத்து 500 கிலோ தேவைப்படும். இதனால், 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை தங்களுக்குச் செலவாகும் எனக்கூறும் ஆரோக்கியதாஸ், தோட்டக்கலையிடம் நாற்றினை பெற்று சொட்டுநீர் பாசனம் மூலம் செய்யப்படும் வெங்காய சாகுபடியில் நல்ல வருமானம் வருவதாக கூறுகிறார்.

ஒரு ஏக்கருக்கு 6 முதல் 7 டன் அளவிலான வெங்காயத்தை விளைச்சலாகப் பெறும் இவர், முறையான பராமரிப்பு இருந்தால் 75 நாளிலே ஏக்கரில் 2.50 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டலாம் என்கின்றார். மேலும், ஆரோக்கியதாஸ் மஞ்சள் பயிரிடும்போது வெங்காயத்திற்கு நடுவே மஞ்சளை பயிர் செய்திருப்பதால், இரட்டிப்பு லாபத்தை பெற்றுவருகிறார்.

kallakurichi onion farming
கள்ளக்குறிச்சி தோட்டக்கலை உதவி இயக்குநர்

இது குறித்து கள்ளக்குறிச்சி தோட்டக்கலை உதவி இயக்குநர் வாமலை பேசும்போது, "தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் வெங்காய சாகுபடிக்கு ஆரோக்கியதாஸுக்கு மானியம் வழங்கியுள்ளோம். வெங்காய நாற்றினை நாங்கள் வழங்குவதால், வெங்காய விதை வாங்கும் செலவு விவசாயிகளுக்கு பெருமளவு குறைகிறது.

வெங்காய சாகுபடி தவிர்த்து மற்ற காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கிவருகிறோம். இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்குகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: சிப்பி அலங்காரம், கடல்பாசி வளர்ப்பு என அசத்தும் ராமநாதபுரம் பெண்மணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.