கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் சுங்கச்சாவடியில் பறக்கும் படை அலுவலர்கள் வாகனச் சோதனையில் இன்று (மார்ச் 2) காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது எவ்வித ஆவணங்களுமின்றி எடுத்து வரப்பட்ட 4 லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், இவர் மீன்குஞ்சு வியாபாரி என்பதும், காஞ்சிபுரம் பகுதி கிராம ஏரியில் ஏலம் எடுக்க சென்று மீண்டும் வீடு திரும்ப வந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் வீட்டில் கொள்ளை!