ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையில் புளிஞ்சூர் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஆக. 25) முதல் இ-பாஸ் இல்லாமல் கர்நாடக மாநிலத்திற்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் கர்நாடக மாநில சுகாதாரத் துறை சார்பில் அமைக்கப்பட்ட கரோனா தடுப்பு சோதனைச்சாவடி மூடப்பட்டது.
இதற்கென தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாமியான பந்தல் அகற்றப்பட்டது. இதனால் தற்போது புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக இ-பாஸ் இன்றி அனைத்து வாகனங்களும் சென்றுவருகின்றன.
இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து