ETV Bharat / state

முதியவர் சந்தேக மரணம் - காவல் துறையினர் விசாரணை

author img

By

Published : Jun 9, 2020, 7:29 PM IST

ஈரோடு: சாலையில் இறந்து கிடந்த 60 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை காவல் துறையினர் மீட்டு, உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதியவர் மரணம் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர்
முதியவர் மரணம் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர்

ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையம் அருகே உள்ள அண்ணா வீதி பகுதியில், அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக, அப்பகுதி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், அம்முதியவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தது தெரியவந்தது.

மேலும் அவரது உடல் அருகே மது பாட்டில்கள் சில கிடைத்ததை அடுத்து, அதிக மது போதை காரணமாக முதியவர் இறந்திருக்கலாம் என கருதிய காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், இறந்தவர் யார், மது போதை காரணமாகத்தான் அவர் உயிரிழந்தாரா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈரோட்டில் மேலும் இருவருக்கு கரோனா!

ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையம் அருகே உள்ள அண்ணா வீதி பகுதியில், அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக, அப்பகுதி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், அம்முதியவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தது தெரியவந்தது.

மேலும் அவரது உடல் அருகே மது பாட்டில்கள் சில கிடைத்ததை அடுத்து, அதிக மது போதை காரணமாக முதியவர் இறந்திருக்கலாம் என கருதிய காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், இறந்தவர் யார், மது போதை காரணமாகத்தான் அவர் உயிரிழந்தாரா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈரோட்டில் மேலும் இருவருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.