ETV Bharat / state

'தடை செய்யப்பட்ட பிட்காயின் முதலீடு' ரூ. 2000 கோடி மோசடி அம்பலம்!

ஈரோடு: பணம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 20 ஆயிரம் கமிஷன் என ஆசைவார்த்தை காட்டி 5 பேர் கொண்ட கும்பல் சுமார் 100க்கும் மேற்பட்ட மக்களிடையே ரூ. 2000 கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

author img

By

Published : Dec 7, 2019, 5:21 PM IST

2000 கோடி மோசடி
bitcoin

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ஸ்வேதா, நண்பர்களான வேலுச்சாமி, மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார், திருச்சியை சேர்ந்த குட்டி மணி ஆகிய 5 பேர் கடந்த மார்ச் மாதம் கோபியை சேர்ந்த கங்காதரன் என்பவரை சந்தித்துள்ளனர். அவரிடம் ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறோம். இதில் ரூ.2.80 லட்சம் முதலீடு செய்தால் மாதம் தோறும் ரூ.20 ஆயிரம் வரை கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தை பேசியுள்ளார். இதை உண்மை என்று நினைத்து, கங்காதரன் அவர்களிடம் ரூ.2.80 லட்சம் கொடுத்துள்ளார். முதல் நான்கு மாதங்கள் கமிஷன் தொகை கொடுத்தவர்கள், அதன் பின்னர் தராமல் இழுத்தடித்துள்ளனர்.

இதனால் நிறுவனம் குறித்து கங்காதரன் விசாரித்தபோது பெயரளவிற்கு ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக கூறியவர்கள், முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையில் முதலீடு செய்து அரசை ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கங்காதரன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, ராஜதுரை உட்பட 5 பேரும் கங்காதரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதனையடுத்து, கங்காதரன் மற்றும் பணத்தை இழந்த பல முதலீட்டாளர்கள் சுமார் 20 பேர் கோபி காவல் நிலையத்தில் ராஜதுரை உள்ளிட்ட 5 பேர் மீதும் புகார் அளித்தனர்.

ஈரோட்டில் ரூ. 2000 கோடி மோசடி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கங்காதரன், ”ராஜதுரை உள்ளிட்ட 5 பேரும் போலியான இணையத்தை உருவாக்கி, இந்தியா முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் (கிரிப்டோ கரன்சி) எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையில் முதலீடு செய்துள்ளதாக கூறி முதலீட்டாளர்களை ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து நிறுவன உரிமையாளர்களான ராஜதுரை அவரது மனைவி ஸ்வேதா ஆகியோரிடம் கேட்டபோது அவர்கள் என் மீது கொலை மிரட்டல் விடுத்தனர்” என்றார்.

இதையும் படிங்க: 'முதலமைச்சர் தொகுதி மிகவும் அபாயகரமானது' - மக்களை அச்சுறுத்திய பதாகை

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ஸ்வேதா, நண்பர்களான வேலுச்சாமி, மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார், திருச்சியை சேர்ந்த குட்டி மணி ஆகிய 5 பேர் கடந்த மார்ச் மாதம் கோபியை சேர்ந்த கங்காதரன் என்பவரை சந்தித்துள்ளனர். அவரிடம் ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறோம். இதில் ரூ.2.80 லட்சம் முதலீடு செய்தால் மாதம் தோறும் ரூ.20 ஆயிரம் வரை கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தை பேசியுள்ளார். இதை உண்மை என்று நினைத்து, கங்காதரன் அவர்களிடம் ரூ.2.80 லட்சம் கொடுத்துள்ளார். முதல் நான்கு மாதங்கள் கமிஷன் தொகை கொடுத்தவர்கள், அதன் பின்னர் தராமல் இழுத்தடித்துள்ளனர்.

இதனால் நிறுவனம் குறித்து கங்காதரன் விசாரித்தபோது பெயரளவிற்கு ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக கூறியவர்கள், முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையில் முதலீடு செய்து அரசை ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கங்காதரன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, ராஜதுரை உட்பட 5 பேரும் கங்காதரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதனையடுத்து, கங்காதரன் மற்றும் பணத்தை இழந்த பல முதலீட்டாளர்கள் சுமார் 20 பேர் கோபி காவல் நிலையத்தில் ராஜதுரை உள்ளிட்ட 5 பேர் மீதும் புகார் அளித்தனர்.

ஈரோட்டில் ரூ. 2000 கோடி மோசடி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கங்காதரன், ”ராஜதுரை உள்ளிட்ட 5 பேரும் போலியான இணையத்தை உருவாக்கி, இந்தியா முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் (கிரிப்டோ கரன்சி) எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையில் முதலீடு செய்துள்ளதாக கூறி முதலீட்டாளர்களை ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து நிறுவன உரிமையாளர்களான ராஜதுரை அவரது மனைவி ஸ்வேதா ஆகியோரிடம் கேட்டபோது அவர்கள் என் மீது கொலை மிரட்டல் விடுத்தனர்” என்றார்.

இதையும் படிங்க: 'முதலமைச்சர் தொகுதி மிகவும் அபாயகரமானது' - மக்களை அச்சுறுத்திய பதாகை

Intro:Body:tn_erd_02_sathy_cheating_bitcoin_vis_tn10009
tn_erd_02_sathy_cheating_bitcoin_photo_tn10009


இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி


கோபியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக உடுமலையை சேர்ந்த தம்பதியர் மீது கோபி காவல்நிலையத்தில் மொடச்சூர் பகுதியை சேர்ந்த கங்காதாரன் என்பவர் புகார் அளித்துள்ளார்…
.
உலகின் பல்வேறு நாடுகளில் பிட்காயின் (கிரிப்டோ கரன்சி) எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை நடைபெற்று வந்தாலும் இந்தியாவில் இந்த பிட்காயின் பரிவர்த்தனை முறைக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் முறையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி இந்தியா முழுவதும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வசூல் செய்து அந்த பணத்தின் மூலம் பிட்காயின் பரிவர்த்தனையில் ஈடுபட்ட உடுமலையை சேர்ந்த தம்பதி உட்பட 5 பேர் மீது கோபி காவல் நிலையத்தில் முதலீடு செய்து ஏமார்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ஸ்வேதா இவர்களின் நண்பர்களான வேலுச்சாமி, மதுரையை சேர்ந்த ராஜ்குமார், திருச்சியை சேர்ந்த குட்டி மணி ஆகியோர் கடந்த மார்ச் மாதம் கோபியை சேர்ந்த கங்காதரன் என்பவரை சந்தித்து ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி உள்ளனர். அதில் ரூ.2.80 லட்சம் முதலீடு செய்தால் மாதம் தோறும் ரூ.20 ஆயிரம் வரை கமிஷன் கொடுப்பதாக கூறி உள்ளனர். அதை நம்பிய கங்காதரன் அவர்களிடம் ரூ.2.80 லட்சம் கொடுத்துள்ளார். முதல் நான்கு மாதங்கள் கமிஷன் தொகை கொடுத்தவர்கள் அதன் பின்னர் தரவில்லை. இதுகுறித்து கங்காதரன் கேட்ட போது, காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதனால் கங்காதரன் நிறுவனம் குறித்து விசாரித்த போது பெயரளவிற்கு ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக கூறியவர்கள், முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையில் முதலீடு செய்து அரசை ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கங்காதரன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது ராஜதுரை உட்பட 5 பேரும் கங்காதரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து கங்காதரன் மற்றும் முதலீட்டாளர்கள் சுமார் 20 பேர் கோபி காவல் நிலையத்தில் ராஜதுரை உள்ளிட்ட 5 பேர் மீதும் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து கங்காதரன் கூறியதாவது, ராஜதுரை உள்ளிட்ட 5 பேரும் போலியான வெப்சைட் உருவாக்கி, இந்தியா முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் (கிரிப்டோ கரன்சி) எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையில் முதலீடு செய்துள்ளதாக கூறி முதலீட்டாளர்களை ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து நிறுவன உரிமையாளர்களான ராஜதுரை அவரது மனைவி சுவேதா ஆகியோரிடம் கேட்ட போது அவர்கள் என் மீது கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.