ETV Bharat / state

கிராமத்தைவிட்டு வெளியேறிய புலி - மகிழ்ச்சியில் மக்கள் - கிராமத்திற்குள் புகுந்த புலி

ஈரோடு: தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த புலி விவசாய நிலங்கள் வழியாக ஓடை, பள்ளம் ஆகியவற்றைக் கடந்து தொட்டமுதுகரை வனத்துக்குள் சென்றது.

கிராமத்தை விட்டு வெளியேறிய புலி
author img

By

Published : May 27, 2019, 2:24 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தாளவாடியை அடுத்த ஜீரஹள்ளி வனப்பகுதியில் சிறுத்தை, புலிகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் ஜீரஹள்ளி வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த 7 வயதுள்ள புலி, சிமிட்டஹள்ளி கிராமத்துக்குள் புகுந்தது.

பின்னர் அங்குள்ள மனோஜ், பழனிச்சாமி எனபவர்களின் விளைநிலங்களை சேதப்படுத்தி விட்டு புதர்மறைவில் தஞ்சம் அடைந்தது.

இதையடுத்து மனோஜ், பழனிச்சாமி புலி நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த வனத்துறையினர் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவில் மழை பெய்ததால் நீண்ட நேரமாக புதரிலேயே காத்திருந்த புலி, விவசாய நிலங்கள் வழியாக ஓடை, பள்ளம் ஆகியவற்றைக் கடந்து தொட்டமுதுகரை வனத்துக்குள் சென்றடைந்தது.

வனத்துறையினர்

இது குறித்து மாவட்ட வன அலுவலர் குமளி வெங்கட் கூறுகையில், "புலி இரவுநேரத்தில் வேட்டையாடும் பழக்கம் உள்ளதால் வனத்தில் இருந்து வழிதவறி கிராமத்துக்குள் புகுந்துவிட்டது. பகல்நேரத்தில் மனிதர்கள் நடமாட்டத்தால் அது பதுங்கியிருந்தது. இரவு நேரத்தில் புலி தானாகவே அதன் வழக்கமான வழித்தடத்தில் வனப்பகுதிக்கு சென்றடைந்தது. புலி நடமாடத்தால் கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார். புலி நடமாட்டத்தால் பீதியில் இருந்த கிராம மக்கள், அது காட்டுகள் சென்றதையடுத்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தாளவாடியை அடுத்த ஜீரஹள்ளி வனப்பகுதியில் சிறுத்தை, புலிகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் ஜீரஹள்ளி வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த 7 வயதுள்ள புலி, சிமிட்டஹள்ளி கிராமத்துக்குள் புகுந்தது.

பின்னர் அங்குள்ள மனோஜ், பழனிச்சாமி எனபவர்களின் விளைநிலங்களை சேதப்படுத்தி விட்டு புதர்மறைவில் தஞ்சம் அடைந்தது.

இதையடுத்து மனோஜ், பழனிச்சாமி புலி நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த வனத்துறையினர் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவில் மழை பெய்ததால் நீண்ட நேரமாக புதரிலேயே காத்திருந்த புலி, விவசாய நிலங்கள் வழியாக ஓடை, பள்ளம் ஆகியவற்றைக் கடந்து தொட்டமுதுகரை வனத்துக்குள் சென்றடைந்தது.

வனத்துறையினர்

இது குறித்து மாவட்ட வன அலுவலர் குமளி வெங்கட் கூறுகையில், "புலி இரவுநேரத்தில் வேட்டையாடும் பழக்கம் உள்ளதால் வனத்தில் இருந்து வழிதவறி கிராமத்துக்குள் புகுந்துவிட்டது. பகல்நேரத்தில் மனிதர்கள் நடமாட்டத்தால் அது பதுங்கியிருந்தது. இரவு நேரத்தில் புலி தானாகவே அதன் வழக்கமான வழித்தடத்தில் வனப்பகுதிக்கு சென்றடைந்தது. புலி நடமாடத்தால் கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார். புலி நடமாட்டத்தால் பீதியில் இருந்த கிராம மக்கள், அது காட்டுகள் சென்றதையடுத்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


சிமிட்டஹள்ளி கிராமமக்களை அச்சுறுத்திய புலி: நள்ளிரவில் விவசாய நிலங்கள், ஓடை வழியாக தொட்டமுதுகரை வனத்துக்குள் சென்றடைந்தது.   
--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 

TN_ERD_05_27_SATHY_RETURN_TIGER_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

சிமிட்டஹள்ளி கிராமமக்களை அச்சுறுத்திய புலி: நள்ளிரவில் விவசாய நிலங்கள், ஓடை வழியாக தொட்டமுதுகரை வனத்துக்குள் சென்றடைந்தது.

புலியின் கால்தடத்தை பின்தொடர்ந்து உறுதி செய்த வனத்துறை
 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஜீரஹள்ளி வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த 7 வயதுள்ள பெண் புலி சிமிட்டஹள்ளி கிராமத்துக்குள் புகுந்தது. அங்குள்ள மனோஜ், பழனிச்சாமி என்பவரின் விளைநிலங்கள் வழியாக சென்று ஒரு மரத்தடியில் பதுங்கியது. தென்னை மரத்தின் வழியாக சென்ற பழனிச்சாமி, மரத்தடியில் புலி பதுங்கியிருப்தை கண்டு கிராமமக்களுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த விவசாயிகள் புலி படுத்திருப்தை கண்டு அப்பகுதிக்கு எவரும் செல்ல வேண்டாம் என எச்சரித்தனர். கிராமமக்கள் அளித்த தகவலின்பேரில் வனத்துறையினர் துப்பாக்கியுடன் வந்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். கிராமமக்கள் தொந்தரவு காரணமாக புலி, மரத்தடியில் இருந்து வேறொரு பகுதிக்கு பாய்ந்து ஓடி அங்குள்ள புதர்மறைவில் தஞ்சமடைந்தது. கடும் வெயில் காரணமாக அப்பகுதியில் இருந்து வெளியேறாமல் காலை முதல் மாலை வரை அதே பகுதியில் இளைப்பாறியது. இதையடுத்து கால்நடை மருத்துவர் அசோகன் புலியை பிடிக்க அதன் வழித்தடத்தில் கூண்டு வைத்து காத்திருந்தனர். நள்ளிரவில் மழை பெய்ததால் நீண்ட நேரமாக காத்திருந்த புலி, விவசாய நிலங்கள் வழியாக ஓடை, பள்ளம் ஆகியவற்றை கடந்து தொட்டமுதுகரை வனத்துக்குள் சென்றடைந்தது. மழை பெய்ததால் ஈரான நிலத்தில் புலியின் கால்தடம் நன்றாக பதிவாகியிருந்ததால் அதனை பின்தொடர்ந்து 5 கிமீ தூரம் நடந்து சென்று காலதடயத்தை உறுதி செய்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் குமளி வெங்கட் கூறுகையில்  புலி இரவுநேரத்தில் வேட்டையாடும் பழக்கம் உள்ளதால் வனத்தில் இருந்து வழிதவறி கிராமத்துக்குள் புகுந்துள்ளது. பகல்நேரத்தில் மனிதர்கள் நடமாட்டத்தால் அது பதுங்கியிருந்தது. இரவு நேரத்தில் புலி தானாகவே அதன் வழக்கமான வழித்தடத்தில் வனப்பகுதிக்கு சென்றடைந்தது. புலி நடமாடத்தால் கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் எதிர்காலத்தில் புலி நடமாடும் பகுதியில் கிராமமக்கள் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.