நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி. இவர் தனது மனைவி தங்கமணி, மகன் பிரனீத் ஆகியோருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, இருசக்கர வாகனத்தில் ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது ஆனைக்கல்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, ஈரோட்டிலிருந்து சேலத்திற்கு அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பட்டப்பகலில் கத்தி முனையில் பணப்பறித்தவர்கள் கைது