ETV Bharat / state

’அமைச்சர் பதவியை விட உள்ளாட்சித் தேர்தல் வெற்றியே இலக்கு’ - தோப்பு வெங்கடாச்சலம் - Chennai pollution

ஈரோடு: அமைச்சர் பதவியை எதிர்பார்த்து தான் செயல்படவில்லை என்றும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்வதே தன்னுடைய இலக்கு என்றும் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

-venkatachalam
author img

By

Published : Nov 11, 2019, 11:45 PM IST

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாக பெருந்துறையில் கட்சி நிர்வாகிகளுடன் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுவரும் சாதனைத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச்சென்று உள்ளாட்சித் தேர்தலில் 100 விழுக்காடு வெற்றி பெறுவோம்.

நடிகர் ரஜினிகாந்த் கருத்துபடி, தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் இல்லை. அதிமுகவின் தலைமையை ஏற்று சிறப்பாக ஆட்சி நடத்திவரும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்று கொண்டனர். அவருக்கு பக்க பலமாக ஓபிஎஸ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்த தோப்பு என். வெங்கடாசலம்

அமைச்சரவையில் எனக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து எனக்கு தெரியாது. அது கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை வெற்றிபெறச் செய்வதுதான் என்னுடைய இலக்கு. தேர்தல் சமயங்களில் சிறப்பாக பணியாற்றுபவர்களைப் பார்த்து மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவிகளை ஜெயலலலிதா வழங்குவார். அதே வழியில் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவார்” என்றார்.

முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்ற முறையில் காற்று மாசு குறித்த கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், பனிக்காலம் வரும் போதெல்லாம் காற்று மாசு அதிகரிப்பது வழக்கமானது என்றார்.

இதையும் படிங்க: நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சிறப்பு கழிப்பறை: அமைச்சர் வேலுமணி தகவல்

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாக பெருந்துறையில் கட்சி நிர்வாகிகளுடன் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுவரும் சாதனைத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச்சென்று உள்ளாட்சித் தேர்தலில் 100 விழுக்காடு வெற்றி பெறுவோம்.

நடிகர் ரஜினிகாந்த் கருத்துபடி, தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் இல்லை. அதிமுகவின் தலைமையை ஏற்று சிறப்பாக ஆட்சி நடத்திவரும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்று கொண்டனர். அவருக்கு பக்க பலமாக ஓபிஎஸ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்த தோப்பு என். வெங்கடாசலம்

அமைச்சரவையில் எனக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து எனக்கு தெரியாது. அது கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை வெற்றிபெறச் செய்வதுதான் என்னுடைய இலக்கு. தேர்தல் சமயங்களில் சிறப்பாக பணியாற்றுபவர்களைப் பார்த்து மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவிகளை ஜெயலலலிதா வழங்குவார். அதே வழியில் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவார்” என்றார்.

முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்ற முறையில் காற்று மாசு குறித்த கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், பனிக்காலம் வரும் போதெல்லாம் காற்று மாசு அதிகரிப்பது வழக்கமானது என்றார்.

இதையும் படிங்க: நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சிறப்பு கழிப்பறை: அமைச்சர் வேலுமணி தகவல்

Intro:ஈரோடு ஆனந்த்
நவ11

அமைச்சர் பதவியை எதிர்பார்த்து தாம் செயல்படவில்லை : தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.

ஈரோடு: அமைச்சர் பதவியை எதிர்பார்த்து தான் செயல்படவில்லை என்றும் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு பதவி கொடுக்கும் ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் சூசகமாக தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக பெருந்துறையில் கட்சி நிர்வாகிகளுடன் அத்தொகுதியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் ஆலோசனை நடத்தினார்.

Body:பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வரும் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்து சென்று உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் கருத்துப்படி தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என கூறிய அவர், அதிமுகவிற்கு சிறப்பான தலைமை ஏற்று நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்று கொண்டதாகவும், பக்க பலமாக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

அமைச்சரவையில் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது பற்றி தனக்கு எதரியாது என்றார். அமைச்சர் பதவியை எதிர்பார்த்து பணியாற்றவில்லை என விளக்கமளித்த வெங்கடாச்சலம், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றுபவர்களை பார்த்து மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவிகளை ஜெயலலலிதா வழங்குவார் என்றும், அதே வழியில் எடப்பாடி பழனிச்சாமியும் செயல்படுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

Conclusion:முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்ற முறையில் காற்று மாசு குறித்த கேள்விக்கு, பனிக்காலம் வரும் போதெல்லாம் காற்றில் மாசு அதிகரிப்பது வழக்கமானது என்றார். அத்துறை குறித்த கருத்துகளை இப்போது சொல்ல முடியாது என மறுப்பு தெரிவித்தார்.

பேட்டி தோப்பு என்.வெங்கடாச்சலம். பெருந்துறை தொகுதி எம்எல்ஏ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.