ETV Bharat / state

’போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கக் கூடாது’ - போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு

ஈரோடு: போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்குவதை எதிர்ப்பதாக சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தர்ராஜன் பேட்டியளித்துள்ளார்.

போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவதை எதிர்ப்பதாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன் பேட்டி
author img

By

Published : Oct 12, 2019, 10:55 AM IST

ஈரோட்டில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதிகள் அலுவலகத்தை சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தர்ராஜன் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாடு அரசு மின்சாரப் பேருந்துகளை இயக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. ஒரு மின்சாரப் பேருந்தின் விலையில் ஆறு சாதரணப் பேருந்துகளை வாங்கமுடியும். டெல்லியில் உள்ளதைபோல எரிவாயுவைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்க அரசு முயற்சிக்க வேண்டும். மின்சாரப் பேருந்துகளை அரசே இயக்கலாம். போக்குவரத்துத் துறை தனியார்மயமாக்குவதை எதிர்க்கிறோம்.

போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவதை எதிர்ப்பதாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன் பேட்டி

தெலங்கானாவில் 40 ஆயிரம் தொழிலாளர்களின் நீக்கத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர்கள் விரோதபோக்கைக் கண்டித்து வரும் 19ஆம் தேதி விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படும். அலுவலர்களை அடிக்கடி மாற்றம் செய்வதை மாநில அரசு கைவிட வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க:தள்ளிப்போன 'மிக மிக அவசரம்' ரிலீஸ்!

ஈரோட்டில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதிகள் அலுவலகத்தை சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தர்ராஜன் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாடு அரசு மின்சாரப் பேருந்துகளை இயக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. ஒரு மின்சாரப் பேருந்தின் விலையில் ஆறு சாதரணப் பேருந்துகளை வாங்கமுடியும். டெல்லியில் உள்ளதைபோல எரிவாயுவைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்க அரசு முயற்சிக்க வேண்டும். மின்சாரப் பேருந்துகளை அரசே இயக்கலாம். போக்குவரத்துத் துறை தனியார்மயமாக்குவதை எதிர்க்கிறோம்.

போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவதை எதிர்ப்பதாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன் பேட்டி

தெலங்கானாவில் 40 ஆயிரம் தொழிலாளர்களின் நீக்கத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர்கள் விரோதபோக்கைக் கண்டித்து வரும் 19ஆம் தேதி விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படும். அலுவலர்களை அடிக்கடி மாற்றம் செய்வதை மாநில அரசு கைவிட வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க:தள்ளிப்போன 'மிக மிக அவசரம்' ரிலீஸ்!

Intro:ஈரோடு ஆனந்த்
அக்.11

போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்க கூடாது - சி.ஐ.டி.யு. சவுந்திரராஜன்!

போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்குவதை எதிர்ப்பதாக சி.ஐ.டி.யு மாநில தலைவர் சவுந்தர்ராஜன் ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார்.

Body:ஈரோட்டில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதிகள் அலுவலகத்தை சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் சவுந்திரராஜன் திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது

தமிழக அரசு மின்சார பேருந்துகளை இயக்குவதாக தெரிவித்துள்ளது.ஒரு மின்சார பேருந்தின் விலையில் 6 சாதரண பேருந்துகள் வாங்கமுடியும் என்றவர் டெல்லியில் உள்ளதைப்போல எரிவாயுவை பயன்படுத்தி வாகனங்களை இயக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்றார்.

மேலும் மின்சார பேருந்துகளை அரசே இயக்கலாம். போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்குவதை எதிர்க்கிறோம். தெலுங்கானாவில் 40 ஆயிரம் தொழிலாளர்கள் நீக்கத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Conclusion:மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து வரும் 19 ம் தேதி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகளை அடிக்கடி மாற்றம் செய்வதை மாநில அரசு கைவிட வேண்டும் என்றும் போக்குவரத்து கழகத்தினை தனியார் மயமாக்குவதை மக்கள் ஏற்று கொள்ள கூடாது என்றும் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.