ETV Bharat / state

சாலை வசதி இல்லாத மலை  கிராமம்! நடந்தே பள்ளிச் செல்லும் மாணவர்கள்! - சாலைவசதி இல்லாத மலைகிராமங்கள் தடசலட்டி, இட்டரை

ஈரோடு: போதிய சாலை வசதி இல்லாததால் தினமும் நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்தே மாணவ,மாணவிகள் பள்ளிக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

சாலைவசதி இல்லாத மலைகிராமம்! நடந்தே பள்ளிச் செல்லும் மாணவர்கள்!
author img

By

Published : Aug 21, 2019, 4:11 PM IST

ஈரோடு மாவட்டம் தலமலை ஊராட்சிக்குட்பட்ட தடசலட்டி, இட்டரை மலை கிராமங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராமங்களுக்கு பெஜலட்டியில் இருந்து தடசலட்டி வரை 4 கி.மீ தூரம் செல்லும் மண் பாதை மட்டுமே உள்ள நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கபட்டுவருகின்றன.

இந்தப் பேருந்தின் மூலமாகவே தடசலட்டி, இட்டரை கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பெஜலட்டியில் உள்ள பள்ளிக்கு வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த மலை கிராமத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்துவருவதால் வந்து கொண்டிருந்த பேருந்தும் மண்ணில் சிக்கிக்கொள்கிறது.

இதனால் இப்பாதை வழியாக கடந்த ஒரு வாரமாக பேருந்து வரவில்லை. எனவே வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் 4 கி.மீ தூரம் பெஜலட்டியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு நடந்தே செல்கின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் மண் பாதையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் தலமலை ஊராட்சிக்குட்பட்ட தடசலட்டி, இட்டரை மலை கிராமங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராமங்களுக்கு பெஜலட்டியில் இருந்து தடசலட்டி வரை 4 கி.மீ தூரம் செல்லும் மண் பாதை மட்டுமே உள்ள நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கபட்டுவருகின்றன.

இந்தப் பேருந்தின் மூலமாகவே தடசலட்டி, இட்டரை கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பெஜலட்டியில் உள்ள பள்ளிக்கு வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த மலை கிராமத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்துவருவதால் வந்து கொண்டிருந்த பேருந்தும் மண்ணில் சிக்கிக்கொள்கிறது.

இதனால் இப்பாதை வழியாக கடந்த ஒரு வாரமாக பேருந்து வரவில்லை. எனவே வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் 4 கி.மீ தூரம் பெஜலட்டியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு நடந்தே செல்கின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் மண் பாதையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:Body:tn_erd_01_sathy_student_no_bus_vis_tn10009

போதிய சாலைவசதி இல்லாததால் பேருந்து இல்லாமல் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து செல்லும் பள்ளி மாணவ,மாணவிகள்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை ஊராட்சிக்கு உட்பட்டது தடசலட்டி,இட்டரை மலைகிராமம் இங்கு சுமார் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன இந்த கிராமத்திக்கு பெஜலட்டி இருந்து தடசலட்டி வரை 4 கி.மீட்டர் தூரம் செல்லும் சாலை மண்பாதை மட்டுமே உள்ளது .இந்த கிராமத்திக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு பேருந்துகள் இயக்கபட்டுவருகின்றன இந்த பேருந்தில் தடசலட்டி மற்றும் இட்டரை கிராமத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பெஜலட்டி உள்ள பள்ளியில் படிப்பதக்கு வந்து செல்கின்றனர் இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த மலைகிராமத்தில் சாரல் மழை அவ்வபோது பெய்துவருகிறது இதனால் அந்த மண் சாலை வழியாக பேருந்து சென்றால் பேருந்து மண்ணில் சிக்கி கொள்கிறது இதனால் பேருந்தை ஒட்டுநர்களால் இயக்க முடியாமல் தவித்துவந்தனர் இதனால் இச்சாலை வழியாக கடந்த ஒரு வாரமாக பேருந்து செல்வது இல்லை. பேருந்து இல்லாமல் வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதியில் 4 கி.மீட்டர் தூரத்தித்தில் உள்ளபெஜலட்டி பள்ளிக்கூடத்திக்கு 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தினத்தேறும் நடந்து சென்று வருகின்றனர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மண்சாலையாக உள்ள சாலையைதார்சாலையாக மாற்ற வேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.