ETV Bharat / state

பெண்களே நுழையாத ஸ்ரீ மல்லிகார்ஜூன கோயில் குண்டம் திருவிழா கோலாகலம்!

author img

By

Published : Mar 10, 2020, 11:04 PM IST

ஈரோடு: மூன்று மலைகளுக்கு நடுவே உள்ள பாறைக் குகையில் அமைந்துள்ள ஆண்கள் மட்டும் வழிபடக் கூடிய ஸ்ரீ மல்லிகார்ஜூன சுவாமி கோயிலில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

Sri Mallikarjuna Temple Gundam Festival
Sri Mallikarjuna Temple Gundam Festival

ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களின் எல்லையான தாளவாடியை அடுத்து கொங்கஹள்ளி என்ற வனம் உள்ளது. இங்கு மூன்று மலைகளுக்கு நடுவே பாறைக் குகையில் ஸ்ரீ மல்லிகார்ஜூன சுவாமி கோயில் அமைந்துள்ளது. லிங்காயத்து பழங்குடியின மக்களுக்கு சொந்தமான இக்கோயிலில் 18 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சார்பில் திருக்குண்டம் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

நேற்று மாலை ருத்திராபிஷேக பூஜையுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கிரிஜம்மன் நந்தவனத் தோப்பிலிருந்து மேள தாளத்துடன் சுவாமி ஆபரணங்கள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. இக்கோயிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பது ஐதீகம் என்பதால், பெண்கள் 2 கி.மீ. தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பாறைக் குகையில் சுயம்புவாக லிங்கம் நிலை கொண்டுள்ளதால் லிங்கத்துக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் ஆகியவை நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. கோயில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் தீ வார்க்கப்பட்டு மலர்கள் தூவப்பட்டன.

ஸ்ரீ மல்லிகார்ஜூன கோயில் குண்டம் திருவிழா

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரவாரத்துடன் பூசாரி மட்டும் குண்டத்தில் இறங்கினார். பூசாரியைத் தவிர பக்தர்கள் எவரும் குண்டம் இறங்கக்கூடாது என்பதால், ஆண் பக்தர்கள் குண்டத்தைத் தொட்டு வழிபட்டனர். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புலி வாகனத்தில் மல்லிகார்ஜூன சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முனிவர் அவதாரத்தில் வரும் சுவாமியை பெண்கள் ஊருக்கு வெளியே உள்ள கிரிஜம்மா நந்தனத் தோப்பில் வந்து வழிபட்டனர். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில்கூட வயதான பெண்கள் வழிபட அனுமதி உள்ளது. ஆனால் இங்கோ பெண்கள் வர முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 5 மணிநேரம் மண் குழிக்குள் இருக்கும் சாமியார்: பக்தர்கள் பரவசம்

ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களின் எல்லையான தாளவாடியை அடுத்து கொங்கஹள்ளி என்ற வனம் உள்ளது. இங்கு மூன்று மலைகளுக்கு நடுவே பாறைக் குகையில் ஸ்ரீ மல்லிகார்ஜூன சுவாமி கோயில் அமைந்துள்ளது. லிங்காயத்து பழங்குடியின மக்களுக்கு சொந்தமான இக்கோயிலில் 18 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சார்பில் திருக்குண்டம் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

நேற்று மாலை ருத்திராபிஷேக பூஜையுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கிரிஜம்மன் நந்தவனத் தோப்பிலிருந்து மேள தாளத்துடன் சுவாமி ஆபரணங்கள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. இக்கோயிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பது ஐதீகம் என்பதால், பெண்கள் 2 கி.மீ. தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பாறைக் குகையில் சுயம்புவாக லிங்கம் நிலை கொண்டுள்ளதால் லிங்கத்துக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் ஆகியவை நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. கோயில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் தீ வார்க்கப்பட்டு மலர்கள் தூவப்பட்டன.

ஸ்ரீ மல்லிகார்ஜூன கோயில் குண்டம் திருவிழா

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரவாரத்துடன் பூசாரி மட்டும் குண்டத்தில் இறங்கினார். பூசாரியைத் தவிர பக்தர்கள் எவரும் குண்டம் இறங்கக்கூடாது என்பதால், ஆண் பக்தர்கள் குண்டத்தைத் தொட்டு வழிபட்டனர். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புலி வாகனத்தில் மல்லிகார்ஜூன சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முனிவர் அவதாரத்தில் வரும் சுவாமியை பெண்கள் ஊருக்கு வெளியே உள்ள கிரிஜம்மா நந்தனத் தோப்பில் வந்து வழிபட்டனர். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில்கூட வயதான பெண்கள் வழிபட அனுமதி உள்ளது. ஆனால் இங்கோ பெண்கள் வர முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 5 மணிநேரம் மண் குழிக்குள் இருக்கும் சாமியார்: பக்தர்கள் பரவசம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.