ETV Bharat / state

ஊரடங்கில் திறந்திருக்கும் கடைகளுக்கு சீல்வைக்க வலியுறுத்தல்!

ஈரோடு: கோபியில் ஊரடங்கின்போது, அனுமதியில்லாமல் இயங்கும் கடைகளுக்கு வருவாய்த் துறையினர் சீல்வைக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஊரடங்கில் திறந்திருக்கும் அனுமதியில்லாத வணிககடைகள்  ஈரோடு செய்திகள்  கோபி செய்திகள்  கோபிச்செட்டிபாளையம் செய்திகள்  kobisettipalayam news
ஊரடங்கில் திறந்திருக்கும் கடைகளுக்கு சீல் வைக்க வலியுறுத்தல்
author img

By

Published : Apr 22, 2020, 12:12 PM IST

கோபிசெட்டிபாளையத்தில் ஊரடங்கை கடைப்பிடிக்காத மக்களால் கரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதிக்குப் பிறகு பல்வேறு பணிகளுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்தது.

அதன்படி, கோபியில் இயங்கும் தற்காலிக காய்கறிச் சந்தை உள்ளிட்ட கடைகளுக்கு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பெருமளவில் வருவதும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துவருவதும் வேதனை அளிப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கோபியில் திறந்துவைக்கப்பட்டிருக்கும் துணிக்கடைகள்

அத்தியாவசியமற்ற பொருள்களை விற்பனைசெய்யும், ஃபேன்ஸி ஸ்டோர்கள், ஹார்டுவேர்ஸ் கடைகள், தேநீர் கடைகள் போன்றவற்றை வியாபாரிகள் திறந்துவைத்து வியாபாரம் செய்துவருகின்றனர். அக்கடைகளுக்குச் செல்லும் மக்களும் தனி நபர் இடைவெளியைப் பின்பற்றாமல் பொருள்களை வாங்கிவருகின்றனர். இது குறித்து காவல் துறையும், வருவாய்த் துறையும் கண்டுகொள்ளாமல் உள்ளதால் நாள்தோறும் கடைகளின் திறப்பும் அதிகரித்தவண்ணமே உள்ளது.

இதனால், மக்களுக்கு கரோனா தொற்றுப் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக கோபியில் திறந்துவைத்துள்ள துணிக்கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு வருவாய்த் துறையினர் சீல்வைக்க வேண்டும் என்றும் குழந்தைகளை காய்கறிச் சந்தைக்கு அழைத்துவரும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும், தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்களின் வாகனங்களைப் பறிமுதல்செய்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: குப்பைக் கிடங்காக மாறும் நெல்மடூர் கிராமம்: நடவடிக்கை எடுக்குமா அரசு?

கோபிசெட்டிபாளையத்தில் ஊரடங்கை கடைப்பிடிக்காத மக்களால் கரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதிக்குப் பிறகு பல்வேறு பணிகளுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்தது.

அதன்படி, கோபியில் இயங்கும் தற்காலிக காய்கறிச் சந்தை உள்ளிட்ட கடைகளுக்கு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பெருமளவில் வருவதும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துவருவதும் வேதனை அளிப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கோபியில் திறந்துவைக்கப்பட்டிருக்கும் துணிக்கடைகள்

அத்தியாவசியமற்ற பொருள்களை விற்பனைசெய்யும், ஃபேன்ஸி ஸ்டோர்கள், ஹார்டுவேர்ஸ் கடைகள், தேநீர் கடைகள் போன்றவற்றை வியாபாரிகள் திறந்துவைத்து வியாபாரம் செய்துவருகின்றனர். அக்கடைகளுக்குச் செல்லும் மக்களும் தனி நபர் இடைவெளியைப் பின்பற்றாமல் பொருள்களை வாங்கிவருகின்றனர். இது குறித்து காவல் துறையும், வருவாய்த் துறையும் கண்டுகொள்ளாமல் உள்ளதால் நாள்தோறும் கடைகளின் திறப்பும் அதிகரித்தவண்ணமே உள்ளது.

இதனால், மக்களுக்கு கரோனா தொற்றுப் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக கோபியில் திறந்துவைத்துள்ள துணிக்கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு வருவாய்த் துறையினர் சீல்வைக்க வேண்டும் என்றும் குழந்தைகளை காய்கறிச் சந்தைக்கு அழைத்துவரும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும், தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்களின் வாகனங்களைப் பறிமுதல்செய்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: குப்பைக் கிடங்காக மாறும் நெல்மடூர் கிராமம்: நடவடிக்கை எடுக்குமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.