ETV Bharat / state

உக்கரம் வாய்க்காலில் நீர் கசிவு, சீரமைப்பு பணி நிறைவு

ஈரோடு: உக்கரம் வாய்க்காலில் சிறிய துவாரம் ஏற்பட்டு நீர் கசிந்ததால் பொதுப்பணித் துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Aug 21, 2019, 4:04 PM IST

உக்கரம் வாய்க்காலில் சீரமைப்பு பணி நடந்தபோது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியை அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலுக்கு, பாசனத்திற்காக 2300 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீரானது, 124 மைல் தூரத்தில் உள்ள காங்கேயம் வரையுள்ள கடைமடை வாய்க்காலுக்குச் சென்றடையும்.

உக்கரம் வாய்க்காலில் சீரமைப்பு பணி நடந்தபோது

இந்நிலையில் முழு கொள்ளளவான 2300 கனஅடி நீர் வாய்க்காலில் சென்றபோது, அணையில் இருந்து உக்கரம் வாய்க்கால் கரையில் ஏற்பட்ட சிறிய துவாரம் வழியாக வாய்க்கால் நீர், தோட்டங்களில் புகுந்தது.

இதைப் பார்த்த விவசாயிகள், பொதுப்பணித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து அங்கு வந்த அலுவலர்கள், தண்ணீரின் அளவை 1000 கனஅடியாக குறைத்து வாய்க்காலில் ஏற்பட்ட கசிவுநீரை தடுத்து துவாரத்தை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். கான்கிரீட், செம்மண்ணைக் கொண்டு கரையை பலப்படுத்தியதையடுத்து மீண்டும் வாய்க்காலில் தண்ணீர், 1000 கனஅடியில் இருந்து படிப்படியாக 2200 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியை அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலுக்கு, பாசனத்திற்காக 2300 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீரானது, 124 மைல் தூரத்தில் உள்ள காங்கேயம் வரையுள்ள கடைமடை வாய்க்காலுக்குச் சென்றடையும்.

உக்கரம் வாய்க்காலில் சீரமைப்பு பணி நடந்தபோது

இந்நிலையில் முழு கொள்ளளவான 2300 கனஅடி நீர் வாய்க்காலில் சென்றபோது, அணையில் இருந்து உக்கரம் வாய்க்கால் கரையில் ஏற்பட்ட சிறிய துவாரம் வழியாக வாய்க்கால் நீர், தோட்டங்களில் புகுந்தது.

இதைப் பார்த்த விவசாயிகள், பொதுப்பணித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து அங்கு வந்த அலுவலர்கள், தண்ணீரின் அளவை 1000 கனஅடியாக குறைத்து வாய்க்காலில் ஏற்பட்ட கசிவுநீரை தடுத்து துவாரத்தை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். கான்கிரீட், செம்மண்ணைக் கொண்டு கரையை பலப்படுத்தியதையடுத்து மீண்டும் வாய்க்காலில் தண்ணீர், 1000 கனஅடியில் இருந்து படிப்படியாக 2200 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

Intro:Body:tn_erd_02_sathy_leakage_stop_vis_tn10009
tn_erd_02a_sathy_leakage_stop_vis_tn10009

கசிவு ஏற்பட்ட உக்கரம் வாய்க்கால் சீரமைப்பு பணி நிறைவு

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு 2300 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் 124 மைல் தூரத்தில் உள்ள காங்கேயம் வரையுள்ள கடைமடை வாய்க்காலில் சென்றடையும். இந்நிலையில் முழுகொள்ளவான 2300 கனஅடிநீர் வாய்காலில் சென்றபோது அணையில் இருந்து 13 வது மைல் உக்கரம் வாய்க்கால் கரையில் ஏற்பட் சிறிய துவாரம் வழியாக வாய்க்கால் நீர் புகுந்து தோட்டங்களில் சூழ்ந்தது. இதை பார்த்த விவசாயிகள் பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அதிகாரிகள் தண்ணீரின் அளவை 1000 அடியாக குறைத்து வாய்க்காலில் ஏற்பட்ட கசிவுநீரை தடுத்து துவாரத்தை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். கான்கிரீட் மற்றும் செண்மண்ணால் கரையை பலப்படுத்தியதையடுத்து மீண்டும் வாய்க்காலில் தற்போது 1000 கனஅடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து இன்று காலை 2200 கனஅடியாக உயர்த்தப்பட்டது. தற்போது வாய்க்காலில் சிரமைக்கப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.