ETV Bharat / state

இலந்தைப்பழம் சீசன் தொடக்கம்: மகிழ்ச்சியில் கரடிகள்! - Beginning of Erode Ilantaippalam season

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கரடிகளுக்கு பிடித்த உணவான இலந்தை பழம் சீசன் தொடங்கியுள்ளது.

கரடிக்கு பிடித்த உணவான இலந்தைப்பழம் சீசன் தொடக்கம்
கரடிக்கு பிடித்த உணவான இலந்தைப்பழம் சீசன் தொடக்கம்
author img

By

Published : Jan 10, 2020, 10:43 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் தேசிய சாலையில், பண்ணாரி அம்மன் கோயில் முதல் காரப்பள்ளம் சோதனைச்சாவடி வரை சாலையின் இருபுறமும் உள்ள வனப்பகுதியில் இலந்தை மரங்கள் அதிகளவில் உள்ளன.

வனப்பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக காய்ந்து கிடந்த மரங்கள் துளிர்விட்டு பசுமையாகக் காட்சியளிக்கின்றன. மேலும், இலந்தை மரங்களில் காய்கள் பிடித்துள்ளன.

கரடிக்குப் பிடித்த உணவான இலந்தைப்பழம் சீசன் தொடக்கம்

கரடிக்குப் பிடித்த உணவான இலந்தைப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் இறங்க வேண்டாம் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பொங்கல் விளைச்சல் அமோகம்... ஆனால் விலை இல்லையே? வருத்தத்தில் விவசாயிகள்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் தேசிய சாலையில், பண்ணாரி அம்மன் கோயில் முதல் காரப்பள்ளம் சோதனைச்சாவடி வரை சாலையின் இருபுறமும் உள்ள வனப்பகுதியில் இலந்தை மரங்கள் அதிகளவில் உள்ளன.

வனப்பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக காய்ந்து கிடந்த மரங்கள் துளிர்விட்டு பசுமையாகக் காட்சியளிக்கின்றன. மேலும், இலந்தை மரங்களில் காய்கள் பிடித்துள்ளன.

கரடிக்குப் பிடித்த உணவான இலந்தைப்பழம் சீசன் தொடக்கம்

கரடிக்குப் பிடித்த உணவான இலந்தைப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் இறங்க வேண்டாம் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பொங்கல் விளைச்சல் அமோகம்... ஆனால் விலை இல்லையே? வருத்தத்தில் விவசாயிகள்!

Intro:Body:tn_erd_01_sathy_elangthaI_pazham_vis_tn10009

சீசன் துவங்கியதால் மரங்களில் காய்ப்பிடித்து தொங்கும் இலந்தை: கரடிக்கு பிடித்த இலந்தைப்பழம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கரடிகளுக்கு பிடித்த உணவான இலந்தை பழம், மரங்களில் அதிக அளவில் காய்த்துள்ளன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கேர்மாளம், தலமலை, ஆசனூர் பகுதியில் ஏராளமான கரடிகள் உள்ளன. கரடிக்கு பிடித்த உணவான இலந்தைப்பழங்கள் தற்போது இலந்தை மரங்களில் காய்ப்பிடித்துள்ளன.இலந்தை மரங்களில் உள்ள இலந்தை பழங்கள் மிகவும் ருசியாக இருக்கும் என்பதால் இந்த பழங்களை குரங்கு மற்றும் பல்வேறு வகையான பறவைகள் விரும்பி சாப்பிடும். இலந்தை மரங்களில் மார்கழி மற்றும் தைமாதங்களில் காய்ப்பிடிக்கும். தைமாத இறுதியில் பழங்களாக விற்பனைக்கு வரும். இந்நிலையில் தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக காயந்து கிடந்த மரங்கள் துளிர்த்து பச்சைப்பசேலென அழகாக காட்சியளிக்கிறது. சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் தேசிய சாலையில் பண்ணாரிஅம்மன் கோயில் முதல் காரப்பள்ளம் சோதனைச்சாவடி வரை சாலையின் இருபுறமும் உள்ள சாலையோர வனப்பகுதியில் உள்ள இலந்தை மரங்கள் அதிக அளவில் உள்ளன. மழை பெய்ததால் இலந்தை மரங்களில் பூக்கள் பூத்து காய்களாக மாறி தற்போது காய்கள் பிடித்துள்ளன.இந்த இலந்தை பழங்களை வனவிலங்குகள் மற்றும் பறவைகள் விரும்பி உண்பதோடு இச்சாலையில் பயணிக்கும் பயணிகளும் பறித்து செல்கின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.