ETV Bharat / state

பெரியார் மீது பிழைக்க வந்த ரஜினி அவதூறு பரப்புவதா?’ - தனியரசு எம்எல்ஏ காட்டம்

ஈரோடு: பிழைப்பிற்காகத் தமிழ் மண்ணிற்கு வந்த ரஜினி பெரியார் குறித்து அவதூறு கருத்து கூறியிருப்பதால் அவரைக் கைது செய்ய வேண்டுமென சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு கூறியுள்ளார்.

author img

By

Published : Jan 24, 2020, 7:08 PM IST

rajini should be arrested says Thaniyarasu MLA
rajini should be arrested says Thaniyarasu MLA

கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினரான தனியரசு ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ் சமூகத்தின் தலைநிமிர்வுக்கு மூலமாக இருந்தவர் தந்தை பெரியார். தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் உயர்ந்து நிற்க வித்திட்டவர் பெரியார். துக்ளக் விழாவில் மூத்த நடிகர் ரஜினிகாந்த் பெரியாரை பற்றி அவதூறான கருத்துக்களை பதிவு செய்து, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் படித்திடாத காரணத்தினாலும், மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அக்கறை இல்லாத காரணத்தினாலும் பெரியார் குறித்தும், திராவிட இயக்கங்கள் குறித்தும் ரஜினி குறை கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தனியரசு பேட்டி

இந்த அவதூறு கருத்துக்களுக்காக தமிழ்நாடு அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். எங்கிருந்தோ வந்து குடியேறிய, தமிழ் மண்ணில் பிழைப்பிற்காக வந்த நடிகர் தமிழ் சமூகத்தின் ஆசான் பெரியாரைப் பற்றி அவதூறு கருத்தைப் பதிவு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சிலையை உடைப்பதன் மூலம் பெரியாரின் புகழையும் அவரது கருத்தையும் தடுத்து நிறுத்திட முடியாது. பூமியில் காற்று உள்ளவரை தமிழ் சமூகத்தில் பெரியாரின் புகழ் பட்டொளி வீசி பறக்கும். அதை யாரும் தடுக்க முடியாது. தமிழ் சமூகம் அரணாக இருந்து, பெரியார் புகழைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: அடி தூள்... ரஜினிகாந்த் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினரான தனியரசு ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ் சமூகத்தின் தலைநிமிர்வுக்கு மூலமாக இருந்தவர் தந்தை பெரியார். தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் உயர்ந்து நிற்க வித்திட்டவர் பெரியார். துக்ளக் விழாவில் மூத்த நடிகர் ரஜினிகாந்த் பெரியாரை பற்றி அவதூறான கருத்துக்களை பதிவு செய்து, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் படித்திடாத காரணத்தினாலும், மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அக்கறை இல்லாத காரணத்தினாலும் பெரியார் குறித்தும், திராவிட இயக்கங்கள் குறித்தும் ரஜினி குறை கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தனியரசு பேட்டி

இந்த அவதூறு கருத்துக்களுக்காக தமிழ்நாடு அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். எங்கிருந்தோ வந்து குடியேறிய, தமிழ் மண்ணில் பிழைப்பிற்காக வந்த நடிகர் தமிழ் சமூகத்தின் ஆசான் பெரியாரைப் பற்றி அவதூறு கருத்தைப் பதிவு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சிலையை உடைப்பதன் மூலம் பெரியாரின் புகழையும் அவரது கருத்தையும் தடுத்து நிறுத்திட முடியாது. பூமியில் காற்று உள்ளவரை தமிழ் சமூகத்தில் பெரியாரின் புகழ் பட்டொளி வீசி பறக்கும். அதை யாரும் தடுக்க முடியாது. தமிழ் சமூகம் அரணாக இருந்து, பெரியார் புகழைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: அடி தூள்... ரஜினிகாந்த் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன24

ரஜினியை கைது செய்ய வேண்டும் - தனியரசு எம்.எல்.ஏ.!

பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தமிழ்ச் சமூகத்தின் தலைநிமிர்வுக்கு மூலமாக இருந்தவர் தந்தை பெரியார், தமிழகம் அனைத்து நிலைகளிலும் உயர்ந்து நிற்க வித்திட்டவர் தந்தை பெரியார். துக்ளக் விழாவில் மூத்த நடிகர் ரஜினிகாந்த் பெரியாரை பற்றி தவறான, அவதூறான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் படித்திராத காரணத்தினாலும் மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அக்கறை இல்லாத காரணத்தினாலும் பெரியாரைப் பற்றியும் திராவிட இயக்கங்களைப் பற்றியும் குறை கூறியிருக்கிறார்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த அவதூறு கருத்துக்களுக்காக தமிழக அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். எங்கிருந்தோ வந்து குடியேறிய, மண்ணின் பிழைப்பிற்காக வந்த நடிகர் தமிழ் சமூகத்தின் ஆசான் பெரியாரை பற்றி இந்த கருத்தை பதிவு செய்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது..

துணை முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் பெரியாருக்கு ஆதரவாக பேசியிருக்கின்றனர். ராஜேந்திர பாலாஜி போன்ற அமைச்சர்கள் முரண்பாடாக பேசி இருப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும். தந்தை பெரியார், அண்ணா போன்றவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தின் மூலம் தான் அவர்கள் அமைச்சராக இருக்கிறார்கள். மற்ற அமைச்சர்களை போல ரஜினிக்கு எதிராக தங்களை திருத்திக் கொள்வார்கள்.

அதிமுக பாஜக உறவு என்பது தேர்தலுக்கான உறவு. சித்தாந்த உறவு என்பது இல்லை அவர்களுடைய உறவு தொடர்வது குறித்து அதிமுக தான் தீர்மானிக்க வேண்டும். இரு கட்சியிலும் கொள்கை ரீதியான உறவு இல்லை. தேர்தலில் இது நெருக்கடியைத் தரும். கூட்டணி தர்மத்திற்காக இதை சகித்துக் கொள்வதாக பாஜகவினர் சொல்கிறார்கள். அதிமுகவிலும் இந்த நெருடல் உள்ளது என்றார்.

பாஜகவின் நிலைப்பாடு ரஜினிகாந்த் நிலைப்பாடும் புறந்தள்ள வேண்டிய ஒன்று.

Body:சிலையை உடைப்பதன் மூலம் பெரியாரின் புகழையும், அவரது கருத்தையும் தடுத்து நிறுத்திட முடியாது. தமிழ் சமூகத்தின் காற்று உள்ளவரை பெரியாரின் புகழ் பட்டொளி வீசி பறக்கும். அதை யாரும் தடுக்க முடியாது. Conclusion:தமிழ் சமூகம் அரணாக இருந்து பெரியார் புகழை பாதுகாக்க வேண்டும். அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் பெரியாரின் பக்கமே நிற்கிறோம் என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.