கொங்கு மண்டலத்தில் பொன்னர்-சங்கர் வாழ்க்கை வரலாறு பற்றிய கதைப்பாட்டு நிகழ்ச்சி ஆங்காங்கே சிறிய அளவில் கிராமங்களில் நடந்துவருகிறது. இதேபோல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தட்டாம்புதூரில் பொன்னர்-சங்கர் கதைப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்போது, கலைஞர்கள் உடுக்கை அடித்து ஆடியதால், கூட்டத்திலிருந்த பெண்களுக்கு சாமி வந்து நடனம் ஆடியது பரவசத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.