ETV Bharat / state

குடிபோதையில் கைகலப்பு; இளைஞர் உயிரிழப்பு - இருவர் கைது - லாரி ஒர்க்ஷாப்

ஈரோடு: குடிபோதையில் இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

arrest
author img

By

Published : Aug 3, 2019, 2:47 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் அங்கு கிடைத்த வேலைகளைச் செய்துவந்தார். கடந்த சில மாதங்களாக நடராஜ் என்பவருக்கு சொந்தமான லாரி ஒர்க் ஷாப்பில் ஜெகதீஸ்வரன் வேலை செய்துவந்தார்.

இந்நிலையில், ஜூலை 31ஆம் தேதி காலை ஒர்க் ஷாப் முன்புறத்தில் பிறப்புறுப்பு காயமடைந்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இதில் ஒர்க் ஷாப் உரிமையாளர் நடராஜ், அதேப் பகுதியில் பஞ்சர் கடை வைத்திருந்த நவீன் இருவரும் தலைமறைவானதால் அவர்களை காவல் துறையினர் தேடிவந்தனர்.

இந்நிலையில் இருவரும் அய்யன்சாலை பகுதியில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஜூலை 30ஆம் தேதி இரவு நடராஜ், நவீன், ஜெகதீஸ்வரன் ஆகிய மூவரும் மது அருந்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து நடராஜ், நவீன் இருவரும் சத்தியமங்கலம் சென்றுவிட்டு திரும்பினர்.

கொலை
கொலையான ஜெகதீஸ்வரன்

அப்போது ஜெகதீஸ்வரன் மதுபோதையில் ஒர்க் ஷாப்பில் காவலராக இருந்த சின்னையாவை அடித்ததாகவும், நடராஜ், நவீன் இருவரும் ஏன் அவரை அடிக்கிறாய் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

கொலை
கைதயான-நடராஜ், நவீன்

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஜெகதீஸ்வரனை இருவரும் தாக்கியதில் பிறப்புறுப்புப் பகுதியில் பலத்த அடிபட்டதோடு ஒர்க் ஷாப்பிலிருந்த இரும்பு ராடில் மோதி மயங்கினார். இதனையடுத்து காலையில் ஜெகதீஸ்வரன் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததால் தலைமறைவானதாக தெரிவித்துள்ளனர்.

பின் இருவரையும் காவல் துறையினர் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் அங்கு கிடைத்த வேலைகளைச் செய்துவந்தார். கடந்த சில மாதங்களாக நடராஜ் என்பவருக்கு சொந்தமான லாரி ஒர்க் ஷாப்பில் ஜெகதீஸ்வரன் வேலை செய்துவந்தார்.

இந்நிலையில், ஜூலை 31ஆம் தேதி காலை ஒர்க் ஷாப் முன்புறத்தில் பிறப்புறுப்பு காயமடைந்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இதில் ஒர்க் ஷாப் உரிமையாளர் நடராஜ், அதேப் பகுதியில் பஞ்சர் கடை வைத்திருந்த நவீன் இருவரும் தலைமறைவானதால் அவர்களை காவல் துறையினர் தேடிவந்தனர்.

இந்நிலையில் இருவரும் அய்யன்சாலை பகுதியில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஜூலை 30ஆம் தேதி இரவு நடராஜ், நவீன், ஜெகதீஸ்வரன் ஆகிய மூவரும் மது அருந்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து நடராஜ், நவீன் இருவரும் சத்தியமங்கலம் சென்றுவிட்டு திரும்பினர்.

கொலை
கொலையான ஜெகதீஸ்வரன்

அப்போது ஜெகதீஸ்வரன் மதுபோதையில் ஒர்க் ஷாப்பில் காவலராக இருந்த சின்னையாவை அடித்ததாகவும், நடராஜ், நவீன் இருவரும் ஏன் அவரை அடிக்கிறாய் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

கொலை
கைதயான-நடராஜ், நவீன்

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஜெகதீஸ்வரனை இருவரும் தாக்கியதில் பிறப்புறுப்புப் பகுதியில் பலத்த அடிபட்டதோடு ஒர்க் ஷாப்பிலிருந்த இரும்பு ராடில் மோதி மயங்கினார். இதனையடுத்து காலையில் ஜெகதீஸ்வரன் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததால் தலைமறைவானதாக தெரிவித்துள்ளனர்.

பின் இருவரையும் காவல் துறையினர் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Intro:tn_erd_01_sathy_murder_accused_photo_tn10009
tn_erd_01a_sathy_murder_accused_photo_tn10009
Body:tn_erd_01_sathy_murder_accused_photo_tn10009
tn_erd_01a_sathy_murder_accused_photo_tn10009

சத்தியமங்கலத்தில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது. குடிபோதையில் ஏற்பட்ட கைகலப்பில் அடித்துக்கொன்றதாக வாக்குமூலம்

சத்தியமங்கலத்தில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகள் ஜெகதீஸ்வரன்(வயது 30). மெக்கானிக் உதவியாளர், பிளம்பர், எலக்ட்ரீசியன் என கிடைத்த வேலையை செய்து வந்த ஜெகதீஸ்வரன் கடந்த சிலமாதங்களாக சத்தியமங்கலம் ரூ கோவை சாலையில் பழைய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள நடராஜ் என்பவருக்கு சொந்தமான அம்மன் மோட்டார்ஸ் என்ற லாரி ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 31 ம் தேதி புதன்கிழமை காலை ஒர்க்ஷாப் முன்புறம் சாலையோரத்தில் மர்ம உறுப்பு காயப்படுத்திய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரித்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஒர்க்ஷாப் உரிமையாளர் நடராஜ் மற்றும் அதே பகுதியில் பஞ்சர் கடை வைத்திருந்த அய்யன்சாலை இந்திராநகர் பகுதியை சேர்ந்த நவீன் இருவரும் தலைமறைவானதால் இருவரை தேடினர். இந்நிலையில் இருவரும் அய்யன்சாலை பகுதியில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்ற சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கிருந்த நடராஜ் மற்றும் நவீன் இருவரையும் போலீசார் பிடித்து வந்து விசாரணை செய்ததில் இருவரும் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது. ஜெகதீஸ்வரன் ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 30 ம் தேதி இரவு நடராஜ், நவீன், ஜெகதீஸ்வரன் 3 பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து நடராஜ், நவீன் இருவரும் சத்தியமங்கலம் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது ஜெகதீஸ்வரன் மதுபோதையில் ஒர்க்ஷாப்பில் வாட்மேனாக இருந்த சின்னுசாமி (எ) சின்னையகவுண்டர் என்பவரை பிடித்து அடித்ததாகவும் அப்போது நடராஜ், நவீன் இருவரும் வாட்ச்மேனை ஏன் அடிக்கிறாய் என கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஜெகதீஸ்வரனை இருவரும் தாக்கியதில் மர்ம உறுப்பு பகுதியில் பலத்த அடிபட்டதோடு ஒர்க்ஷாப்பில் இருந்த ட்ராலியை தள்ளிச்சென்று ஜெகதீஸ்வரன் மீது மோதியதில் இடுப்பில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்து விட்டதாகவும், இதைத்தொடர்ந்து காலையில் ஜெகதீஸ்வரன் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததால் இருவரும் தலைமறைவானதாக தெரிவித்துள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.