ETV Bharat / state

ஈரோட்டில் களைகட்டிய தீபாவளி துணி விற்பனை!

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் ஆர்வத்துடன் புத்தாடைகளை, வாங்கிச் செல்கின்றனர்.

author img

By

Published : Oct 23, 2019, 12:04 PM IST

பொள்ளாச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்

ஈரோடு மாவட்டம் : தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ள நிலையில் ஈரோடு கடைவீதிப்பகுதியில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் கூடி தங்களுக்குத் தேவையான துணி ரகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்து மக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ள நிலையில் மக்கள் தங்களுக்குத் தேவையான ஜவுளி ரகங்களை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.

ஈரோடு கடைவீதிப் பகுதியில் வழக்கத்தைவிட அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. கடைவீதிப் பகுதியிலுள்ள கனிமார்க்கெட், சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள ஜவுளி விற்பனை நிலையங்கள் முதல் பெரிய விற்பனை நிலையங்கள் வரை மக்கள் அதிக அளவில் துணிகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் அனைத்து விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதேபோல் கடந்தாண்டை விடவும் கூடுதலான கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பெரிய ஜவுளி விற்பனை நிலையங்களில் கடந்தாண்டை விடவும் இந்தாண்டு கூடுதலான விலையில் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் களைகட்டிய துணி விற்பனை

கடைவீதிப் பகுதியில் கூடியுள்ள பெருங்கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காவல்துறையினர் தற்காலிகக் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்தும், கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தும் கூட்டத்தைக் கண்காணித்து, ஒலிப்பெருக்கியில் எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர்.

இதேபோல், கோயம்புத்தூர் மாவட்டத்திலும் தீபாவளி திருநாள் வருவதையொட்டி பொள்ளாச்சியில் உள்ள காந்தி மண்டபம் வீதி, வெங்கட்ராமன் வீதி உள்ளிட்டப் பகுதிகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து, துணிகளை வாங்க குவிந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வந்ததால் கடைவீதிகளுக்குச் செல்வதற்குப் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது மழை இல்லாததால் மக்கள் அதிக அளவில் கடைவீதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

மேலும், பொதுமக்கள் கூறுகையில் பாதாள சாக்கடை பணியால் வாகனங்கள் நிறுத்த முடியவில்லை எனவும்; கூடுதல் பேருந்து வசதிகள் அமைத்துத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சியில் துணிக்கடை வீதிகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்

வியாபாரிகள் கூறுகையில், 'கடைவீதிகள் உள்ளிட்டப் பல பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டும் செயல்படாத நிலையில் உள்ளது. இதனால், பல குற்றச் சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டைப்போல், இந்த ஆண்டும் உயர் கோபுரங்கள் அமைத்து காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்' என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : தீபாவளி பண்டிகை: அமோகமாக விற்பனையாகும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா!

ஈரோடு மாவட்டம் : தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ள நிலையில் ஈரோடு கடைவீதிப்பகுதியில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் கூடி தங்களுக்குத் தேவையான துணி ரகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்து மக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ள நிலையில் மக்கள் தங்களுக்குத் தேவையான ஜவுளி ரகங்களை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.

ஈரோடு கடைவீதிப் பகுதியில் வழக்கத்தைவிட அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. கடைவீதிப் பகுதியிலுள்ள கனிமார்க்கெட், சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள ஜவுளி விற்பனை நிலையங்கள் முதல் பெரிய விற்பனை நிலையங்கள் வரை மக்கள் அதிக அளவில் துணிகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் அனைத்து விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதேபோல் கடந்தாண்டை விடவும் கூடுதலான கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பெரிய ஜவுளி விற்பனை நிலையங்களில் கடந்தாண்டை விடவும் இந்தாண்டு கூடுதலான விலையில் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் களைகட்டிய துணி விற்பனை

கடைவீதிப் பகுதியில் கூடியுள்ள பெருங்கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காவல்துறையினர் தற்காலிகக் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்தும், கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தும் கூட்டத்தைக் கண்காணித்து, ஒலிப்பெருக்கியில் எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர்.

இதேபோல், கோயம்புத்தூர் மாவட்டத்திலும் தீபாவளி திருநாள் வருவதையொட்டி பொள்ளாச்சியில் உள்ள காந்தி மண்டபம் வீதி, வெங்கட்ராமன் வீதி உள்ளிட்டப் பகுதிகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து, துணிகளை வாங்க குவிந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வந்ததால் கடைவீதிகளுக்குச் செல்வதற்குப் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது மழை இல்லாததால் மக்கள் அதிக அளவில் கடைவீதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

மேலும், பொதுமக்கள் கூறுகையில் பாதாள சாக்கடை பணியால் வாகனங்கள் நிறுத்த முடியவில்லை எனவும்; கூடுதல் பேருந்து வசதிகள் அமைத்துத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சியில் துணிக்கடை வீதிகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்

வியாபாரிகள் கூறுகையில், 'கடைவீதிகள் உள்ளிட்டப் பல பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டும் செயல்படாத நிலையில் உள்ளது. இதனால், பல குற்றச் சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டைப்போல், இந்த ஆண்டும் உயர் கோபுரங்கள் அமைத்து காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்' என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : தீபாவளி பண்டிகை: அமோகமாக விற்பனையாகும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா!

Intro:bazzarBody:bazzarConclusion:பொள்ளாச்சியில் கடைவீதியில் தீபாவளி திருநாள் வருவதையெட்டி காந்தி மண்டபம் வீதி, வெங்கட்ராமன் வீதி, புதிய பேருந்து நிலையா பகுதிகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து துணிகளை வாங்க குவிந்தனர் ,கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்ததால் மிகவும் சிரமப்பட்டனர், இன்று மழை இல்லாததால் மக்கள் அதிக அளவில் வந்து உள்ளனர், மேலும் பொதுமக்கள் கூறுகையில் பாதாள சாக்கடை பணியால் வாகனம் நிறுத்த முடியவில்லை எனவும் கூடுதல் பேருந்து வசதி வேண்டும் என தெரிவித்தனர். வியாபாரிகள் கூறுகையில் கடைவீதி மற்றும் பல பகுதிகளில் கண்காணிப்பு கேமரா இருந்தும் செயல்பாடு இல்லை எனவும் இதனால் பல குற்றச் சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது ஆகவே போன வருடம் மாதிரி உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் கோரிக்கை வைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.