ETV Bharat / state

ஈரோடு - புளியம்கோம்பை பகுதியில் அணை கட்ட மக்கள் கோரிக்கை!

author img

By

Published : Nov 19, 2019, 11:01 AM IST

ஈரோடு: புளியம்கோம்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் அப்பகுதி விவசாயம் செழிக்கவும் கம்பத்ராயன் அணைத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

kambathrayan dam in puliyamkombai

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனத்தையொட்டி புளியம்கோம்பை கிராமம் அமைந்துள்ளது. குத்தியாலத்தூர், கடம்பூர் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பல புதிய அருவிகள் உருவாகி, காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்துள்ளன.

இந்த வெள்ள நீரானது புளியம்கோம்பை வழியாகச் சென்று பவானி ஆற்றில் கலக்கிறது. ஆண்டுதோறும் குத்தியலத்தூர், கடம்பூர் வனப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவின் அளவு 2 டிஎம்சி எனக் கணக்கிடப்படுகிறது. இந்த 2 டிஎம்சி அளவிலான மழைநீரானது அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு எந்தவிதப் பயனும் இல்லாமல் பவானி ஆற்றில் கலக்கிறது.

ஏற்கெனவே, புளியம்கோம்பையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் அப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகித்து வருகிறது. இப்பகுதியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்குவதற்கும் வனப்பகுதியில் பெய்யும் மழை நீரைத் தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கும் ஏதுவாக கம்பத்ராயன் அணை கட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு திட்ட அறிக்கைத் தயார் செய்யப்பட்டது.

புளியம்கோம்பை பகுதியில் அணை கட்ட மக்கள் கோரிக்கை

அதன்பின்பு அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தப் பலனும் இல்லை. கம்பத்ராயன் அணைத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், அப்பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

மேலும், புளியம்கோம்பை பகுதியைச்சுற்றிலும் உள்ள 20ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் செழிப்பாகும். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு உரிய நடவடிக்கை எடுத்து கம்பத்ராயன் அணையைக் கட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: 'அதிகாலை 4 மணி...சந்தேகத்திற்கிடமான கார்' - பின்தொடர்ந்த அதிகாரிகளுக்கு கிடைத்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனத்தையொட்டி புளியம்கோம்பை கிராமம் அமைந்துள்ளது. குத்தியாலத்தூர், கடம்பூர் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பல புதிய அருவிகள் உருவாகி, காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்துள்ளன.

இந்த வெள்ள நீரானது புளியம்கோம்பை வழியாகச் சென்று பவானி ஆற்றில் கலக்கிறது. ஆண்டுதோறும் குத்தியலத்தூர், கடம்பூர் வனப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவின் அளவு 2 டிஎம்சி எனக் கணக்கிடப்படுகிறது. இந்த 2 டிஎம்சி அளவிலான மழைநீரானது அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு எந்தவிதப் பயனும் இல்லாமல் பவானி ஆற்றில் கலக்கிறது.

ஏற்கெனவே, புளியம்கோம்பையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் அப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகித்து வருகிறது. இப்பகுதியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்குவதற்கும் வனப்பகுதியில் பெய்யும் மழை நீரைத் தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கும் ஏதுவாக கம்பத்ராயன் அணை கட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு திட்ட அறிக்கைத் தயார் செய்யப்பட்டது.

புளியம்கோம்பை பகுதியில் அணை கட்ட மக்கள் கோரிக்கை

அதன்பின்பு அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தப் பலனும் இல்லை. கம்பத்ராயன் அணைத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், அப்பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

மேலும், புளியம்கோம்பை பகுதியைச்சுற்றிலும் உள்ள 20ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் செழிப்பாகும். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு உரிய நடவடிக்கை எடுத்து கம்பத்ராயன் அணையைக் கட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: 'அதிகாலை 4 மணி...சந்தேகத்திற்கிடமான கார்' - பின்தொடர்ந்த அதிகாரிகளுக்கு கிடைத்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா!

Intro:பேட்டி:
பி.கனேஷ், புளியம்கோம்பை
கிருஷ்ணராஜ், சத்தியமங்கலம்Body:tn_erd_01_sathy_kambathrayan_dam_vis_tn10009
tn_erd_01a_sathy_kambathrayan_dam_byte_tn10009
tn_erd_01b_sathy_kambathrayan_dam_byte_tn10009:



மழைக்காலங்களில் வீணாக ஆற்றில் கலக்கும் 2 டிஎம்சி நீர் தேக்கி கம்பத்ராயன்அணை கட்டப்படுமா விவசாயிகள் எதிர்ப்பார்ப்பு


கடம்பூர் மலைப்பகுதியில் பெய்யும் 2 டிஎம்சி மழைநீர் வீணாக ஆற்றில் கலப்பதை தடுத்து நிறுத்தி கம்பத்ராயன் அணை திட்டத்தை தற்போது நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சத்தியங்கலம் புலிகள் காப்பகம் வனத்தையொட்டி நகராட்சிப்பகுதியில் புளியம்கோம்பை உள்ளது. குத்தியாலத்தூர் கடம்பூர் வனப்பகுதியில் பெய்த கனமழையால் புதிய அருவிகள் உருவாகி காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து புளியம்கோம்பை வழியாக பவானிஆற்றில் கலக்கிறது. ஆண்டுதோறும் 6 மாதம் மழைப்பொழிவு காலங்களில் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரின் அளவு 2 டிஎம்சி என கணக்கிடப்படுகிறது. இந்த மழைநீர் வீணாக ஆற்றில் கலப்பதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. வெள்ளநீரை தடுத்து அணை கட்டி நீரை சேமிக்கலாம் என கம்பத்ராயன் அணைத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் பலமுறை பல்வேறு கட்டப்போராட்டங்களில் ஈடுபட்டும் திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அண்மையில் பெய்த மழையால் வனப்பகுதியில் இருந்து அருவியாக உருவெடுத்து பல்வேறு ஓடைகளில் இருந்து வந்த வெள்ளநீர் புளியம்கோம்பை வழியாக பவானிஆற்றை சென்றடைந்தது. வீணாக ஆற்றில் கலக்கும் இந்த நீரை தடுத்து அணை கட்டி சேமித்தால் இப்பகுதியில் உள்ள பெரியகுளம், புளியம்கோம்பை, போலிப்பள்ளம் மற்றும் நகராட்சி பகுதியில் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் செழிப்பாகும். நகராட்சி பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் உயரும். புளியம்கோம்பையை சுற்றியுள்ள ஆண்டன்நகர், பெரியகுளம் போன்ற பகுதியில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவுவதால் சத்தியமங்கலம் நகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கம்பத்ராயன் அணை திட்டம் நிறைவேற்றப்பட்டால் இங்கு நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். வனவிலங்குகள் குடிநீர் பிரச்சனை தீரும். கம்பத்ராயன் அணை திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வீணாகா ஆற்றில் கலக்கும் நீரை தடுத்து வாய்க்கால் பாசனத்துக்கு உதவும் வகையில் அணை கட்ட வேண்டும் என கோரிக்கை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.