ETV Bharat / state

பாசூர் தடுப்பணையில் 4ஆவது முறையாக மண் சரிவு - போக்குவரத்து நிறுத்தம்! - Pasur Barriage Bridge Renovation Work

ஈரோடு: காவிரியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாசூர் தடுப்பணையில் நான்காவது முறையாக சாலையின் இடது புறத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதை முழுவதுமாக சீரமைக்கப்படும் வரை ஈரோடு - நாமக்கல் இரு மார்க்க போக்குவரத்துக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பாசூர் தடுப்பணையில் 4-வது முறையாக மண் சரிவு பாசூர் தடுப்பணை சீரமைப்பு பணிகள் பாசூர் தடுப்பணை Erode Pasur Barriage Bridge Renovation Work Pasur Barriage Bridge Renovation Work Pasur Barriage Bridge Damge
Erode Pasur Barriage Bridge Renovation Work
author img

By

Published : Jan 22, 2020, 11:19 AM IST

ஈரோடு, நாமக்கல் ஆகிய இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில் கடந்த 2006ஆம் ஆண்டு காவிரியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாசூர் கதவணை பாலத்தின் சாலையை, இரண்டு மாவட்டத்தினரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த ஜூன், நவம்பர் மாதங்களில் பாலத்தையொட்டியிருந்த சாலையில் மண் சரிந்து விழுந்து சீரமைக்கப்பட்டது.

மேலும் போக்குவரத்திற்கான சாலையையும், பாலத்தையும் அச்சமின்றி கடப்பதற்கான சீரமைப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, சாலையின் ஒருபுறத்தில் போக்குவரத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு மறுபுறத்தில் சாலை சீரமைப்புப் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நான்காவது முறையாக சீரமைப்புப் பணி நடைபெற்று வந்த சாலையின் மறுபுறமான இடது பக்கத்தில் மண்ணும், கற்களும் சரிந்து விழுந்தன.

இதன் காரணமாக பாதுகாப்பு கருதி உடனடியாக ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு இரு மார்க்கமாக அமைந்துள்ள இந்த வழிப்பாதையில் அனைத்து ரக வாகனப் போக்குவரத்துக்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த சாலையில் அடிக்கடி இதுபோன்ற மண்சரிவு உள்ளிட்ட இடர்பாடுகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மிக உறுதியான சாலை, பாலம் ஆகியவற்றை சீரமைத்திட வேண்டும்.

பாசூர் தடுப்பணை

இந்தப் பாலத்தில் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வரும் நிலையில், பாதுகாப்பான பாதையை பலமுடன் அமைத்திட வேண்டும் என்று அப்பகுதியினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இந்தப் பாலத்தையொட்டியுள்ள சாலையில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் அப்பகுதியினரிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

கடல்நீர் உள்புகுவதைத் தடுக்கும் வகையில் வயலூரில் தடுப்பணை!

ஈரோடு, நாமக்கல் ஆகிய இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில் கடந்த 2006ஆம் ஆண்டு காவிரியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாசூர் கதவணை பாலத்தின் சாலையை, இரண்டு மாவட்டத்தினரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த ஜூன், நவம்பர் மாதங்களில் பாலத்தையொட்டியிருந்த சாலையில் மண் சரிந்து விழுந்து சீரமைக்கப்பட்டது.

மேலும் போக்குவரத்திற்கான சாலையையும், பாலத்தையும் அச்சமின்றி கடப்பதற்கான சீரமைப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, சாலையின் ஒருபுறத்தில் போக்குவரத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு மறுபுறத்தில் சாலை சீரமைப்புப் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நான்காவது முறையாக சீரமைப்புப் பணி நடைபெற்று வந்த சாலையின் மறுபுறமான இடது பக்கத்தில் மண்ணும், கற்களும் சரிந்து விழுந்தன.

இதன் காரணமாக பாதுகாப்பு கருதி உடனடியாக ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு இரு மார்க்கமாக அமைந்துள்ள இந்த வழிப்பாதையில் அனைத்து ரக வாகனப் போக்குவரத்துக்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த சாலையில் அடிக்கடி இதுபோன்ற மண்சரிவு உள்ளிட்ட இடர்பாடுகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மிக உறுதியான சாலை, பாலம் ஆகியவற்றை சீரமைத்திட வேண்டும்.

பாசூர் தடுப்பணை

இந்தப் பாலத்தில் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வரும் நிலையில், பாதுகாப்பான பாதையை பலமுடன் அமைத்திட வேண்டும் என்று அப்பகுதியினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இந்தப் பாலத்தையொட்டியுள்ள சாலையில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் அப்பகுதியினரிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

கடல்நீர் உள்புகுவதைத் தடுக்கும் வகையில் வயலூரில் தடுப்பணை!

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன22

பாசூர் தடுப்பணையில் 4-வது முறையாக மண் சரிவு - போக்குவரத்து நிறுத்தம்!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள பாசூர் காவிரியாற்றின் பாலம் மற்றும் சாலை சீரமைப்புப் பணி நடைபெற்று வரும் நிலையில் நான்காவது முறையாக சாலையின் இடது புறத்தில் மண் மற்றும் கற்கள் சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதை முழுவதுமாக சீரமைக்கப்படும் வரை ஈரோடு நாமக்கல் இரு மார்க்க போக்குவரத்துக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களை இணைத்திடும் வகையில் கடந்த 2006ம் ஆண்டு காவிரியாற்றின் குறுக்கே ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள பாசூர் கதவணை நீர்த்தேக்க மின் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் சாலையை இரண்டு மாவட்டத்தினரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே பாலத்தினையொட்டி அமைந்துள்ள சாலையில் கடந்த ஜூன் மாதமும், நவம்பர் மாதங்களில் பாலம் மற்றும் பாலத்தையொட்டியிருந்த சாலையின் மண் சரிந்து விழுந்து சீரமைக்கப்பட்டது. மேலும் போக்குவரத்திற்கான சாலையையும், பாலத்தையும் அச்சமின்றி கடப்பதற்கான சீரமைப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து சாலையின் ஒருபுறத்தில் போக்குவரத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு மறுபுறத்தில் சாலை சீரமைப்புப் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நான்காவது முறையாக சீரமைப்புப் பணி நடைபெற்று வந்த சாலையின் மறுபுறமான இடது பக்கத்தில் மண்ணும்,கற்களும் சரிந்து விழுந்தது.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி உடனடியாக ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கான இரு மார்க்கமாக அமைந்துள்ள இந்த வழிப்பாதையில் அனைத்து ரக வாகனப் போக்குவரத்துக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


Body:தொடர்ந்து இந்தப் பாலம் மற்றும் பாலத்தையொட்டியுள்ள சாலையில் ஏற்பட்டு வரும் பாதிப்புக்கள் அப்பகுதியினரிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Conclusion:காவிரியாற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த சாலையில் அடிக்கடி இதுபோன்ற மண்சரிவு உள்ளிட்ட இடர்பாடுகள் மீண்டும் ஏற்படாமல் தடுத்திடுவதற்கு ஏற்ப மிக உறுதிப்பாடான நிலையில் சாலையை அமைத்திடவும் பாலத்தை உறுதியுடன் சீரமைத்திட வேண்டும் என்றும், இந்தப் பாலத்தில் பள்ளி,கல்லூரி பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வரும் நிலையில் பாதுகாப்பான அனைத்து போக்குவரத்துக்கும் பாதிப்பில்லாத வகையில் நிரந்தரத் தீர்வாக பாதையை பலமுடன் அமைத்திட வேண்டும் என்று அப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி: மோகன் பாசூர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.