ETV Bharat / state

மனிதர்களிடம் இயல்பாக பழகும் ஆண் குரங்கு...! வைரல் வீடியோ! - monkey and man giving love

ஈரோடு: சத்தியமங்கலத்தில் ஆண் குரங்கு ஒன்று, மனிதர்களுடன் இயல்பாக பழகி மடியில் படுத்து உறங்குவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

sathy mokey and human friendship video
author img

By

Published : Aug 22, 2019, 9:11 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின். இவர், அதே பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேநீர் கடையின் முன் உள்ள மரத்தடியில் சுற்றித்திரிந்த ஆண் குரங்கு ஒன்று, கவினின் மடியில் அமர்ந்து கொண்டது.

இதைக்கண்டு ஆச்சரியமடைந்த அவர், குரங்கிற்கு பழங்கள், கடலை உள்ளிட்ட உணவுகளை வழங்கினார். கொடுத்த உணவுகளை சாப்பிட்டு விட்டு அவர் மடியிலேயே படுத்து உறங்கியது.

மடியில் படுத்து உறங்கும் ஆண்குரங்கு

கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் சுற்றி வரும் ஆண் குரங்கு, கவினுடன் நெருங்கி பழகுவதோடு அவரது நண்பர்கள் வந்து அமரும் போது அவர்களுடனும் நெருங்கி பழகுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின். இவர், அதே பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேநீர் கடையின் முன் உள்ள மரத்தடியில் சுற்றித்திரிந்த ஆண் குரங்கு ஒன்று, கவினின் மடியில் அமர்ந்து கொண்டது.

இதைக்கண்டு ஆச்சரியமடைந்த அவர், குரங்கிற்கு பழங்கள், கடலை உள்ளிட்ட உணவுகளை வழங்கினார். கொடுத்த உணவுகளை சாப்பிட்டு விட்டு அவர் மடியிலேயே படுத்து உறங்கியது.

மடியில் படுத்து உறங்கும் ஆண்குரங்கு

கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் சுற்றி வரும் ஆண் குரங்கு, கவினுடன் நெருங்கி பழகுவதோடு அவரது நண்பர்கள் வந்து அமரும் போது அவர்களுடனும் நெருங்கி பழகுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Intro:Body:tn_erd_02_sathy_monkey_friends_vis_tn10009

மனிதர்களிடம் இயல்பாக பழகும் குரங்கு
தலையை வருடியவுடன் மடியில் படுத்து உறங்கும் குரங்கு
அன்பால் விலங்குகளையும் வசப்படுத்த முடியும் என்கிறார் தேநீர் கடைக்காரர்

:
சத்தியமங்கலத்தில் ஒரு ஆண் குரங்கு மனிதர்களுடன் இயல்பாக பழகி மடியில் படுத்துறங்குவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்கின்றனர். மனிதர்களையும் விலங்குகளையும் அன்பால் இணைக்கும் முடியும் என்கிறார் தேநீர் கடைக்காரர்.

சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவின். தேநீர் கடைக்காரர். இவர் சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இவரது உணவகத்தின் முன்புள்ள மரத்தடியில் ஒரு ஆண்குரங்கு முகாமிட்டது. மரத்தடியில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்த கவினின் மடி மீது குரங்கு திடீரென ஏறி அமர்ந்துகொண்டது. இதைக்கண்ட கவின் ஆச்சரியமடைந்தார். குரங்குகள் மனிதர்களை கண்டாலே விலகி ஓடும் சுபாவம் உள்ள நிலையில் இந்த ஆண்குரங்கு மடியின் மீது ஏறி அமர்ந்துகொண்டதை கண்டு வியப்படைந்து ஆண் குரங்கிற்கு பழங்கள், கடலை உள்ளிட்ட உணவுகளை வழங்கினர். குரங்கு தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு கவினின் மடி மீது படுத்துறங்க ஆரம்பித்தது. கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் சுற்றி வரும் இந்த ஆண்குரங்கு கவினுடன் நெருங்கி பழகுவதோடு அவரது நண்பர்கள் வந்து நாற்காலியில் அமர்ந்தபோது அவர்களுடனும் குரங்கு நெருங்கி பழகியதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். அன்போடு மனிதர்களுடன் பழகும் இந்த குரங்கு அமைதியாக மடியில் அமர்ந்தபடி ஆனந்தமாக உறங்குவதை வியப்புடன் பார்த்து ரசிக்கின்றனர். ஆண்குரங்கும் அன்புக்காக ஏங்கி மனிதனிடம் தஞ்சமடைந்துள்ள சம்பவம் இப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.