ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை - குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

ஈரோடு: சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

erode
erode
author img

By

Published : Feb 26, 2020, 7:17 PM IST

ஈரோடு, மாணிக்கம்பாளையம் நேதாஜி நகரைச் சேர்ந்த கார்த்தி என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி, 2016ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதன்பின் அச்சிறுமியை கும்பகோணத்துக்கு கடத்திச் சென்றார்.

இதையடுத்து, ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதன்பின், வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ, கடத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கார்த்தி கைது செய்யப்பட்டார்.

குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி மாலதி, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஈரோடு ஆட்சியர் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தலைமையாசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு: இருதரப்பு போராட்டம்

ஈரோடு, மாணிக்கம்பாளையம் நேதாஜி நகரைச் சேர்ந்த கார்த்தி என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி, 2016ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதன்பின் அச்சிறுமியை கும்பகோணத்துக்கு கடத்திச் சென்றார்.

இதையடுத்து, ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதன்பின், வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ, கடத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கார்த்தி கைது செய்யப்பட்டார்.

குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி மாலதி, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஈரோடு ஆட்சியர் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தலைமையாசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு: இருதரப்பு போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.