ETV Bharat / state

‘நொய்யல் ஆற்றில் சாய ஆலைக்கழிவுகளை கலந்தால் மிசா சட்டம் பாயும்’

ஈரோடு: நொய்யல் ஆற்றில் சாய ஆலையின் கழிவுகள் கலக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவும் தயங்க மாட்டோம் என்று அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் எச்சரித்துள்ளார்.

author img

By

Published : Aug 19, 2019, 6:11 AM IST

k.c.karuppanan

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒன்பது இடங்களில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் தங்கும் நிழற்குடை, கவுந்தப்பாடி புதூரில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றை தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், பவானி தொகுதியில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 60 இடங்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

நொய்யல் ஆற்றில் சாய ஆலைக் கழிவுகள் கலக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த கருப்பணன், அது போல் நூறு சதவிகிதம் இல்லை எனவும், எந்த இடத்தில் என்று தெரிந்தால் அவர்களைப் பிடித்து மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கவும் தயாராக உள்ளோம், 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒன்பது இடங்களில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் தங்கும் நிழற்குடை, கவுந்தப்பாடி புதூரில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றை தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், பவானி தொகுதியில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 60 இடங்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

நொய்யல் ஆற்றில் சாய ஆலைக் கழிவுகள் கலக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த கருப்பணன், அது போல் நூறு சதவிகிதம் இல்லை எனவும், எந்த இடத்தில் என்று தெரிந்தால் அவர்களைப் பிடித்து மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கவும் தயாராக உள்ளோம், 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Intro:Body:நொய்யல் ஆற்றில் சாய ஆலைக்கழிகள் கலக்கப்பட்டால் மிசா சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் கருப்பணன்

tn_erd_04_sathy_minister_kuruppanan_vis_tn10009

தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பல்வேறு நிகழ்ச்களில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்கள் சந்திப்ப

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது.. பிளாஸ்டிக்பொருட்கள் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நொய்யல் ஆற்றில் சாய ஆலைக்கழிகள் கலக்கப்பட்டால் மிசா சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் காகித ஆலை கழிவுகள் உரமாக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்…

கவுந்தப்பாடி புதூரில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்த அமைச்சர் கருப்பணன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்கு கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் அபராதங்கள் விதிக்கப்பட்டுவருதாகவும் அனைத்து தொழிற்சாலைகளையும் மூடப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். வடமாநிலங்களிலிருந்து குறைந்தளவு தமிழகத்து வருகிறது. அதை தடுக்கவும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கூடியவிரைவில் அதுவும் தடுக்கப்படும். அரசு நிகழ்ச்சிகளில் தெரியாமல் ஒன்று இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் அது போல் இல்லை என்றார். பவானி தொகுதியில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 60 இடங்களில் குடிமராமத்து பணிகள் நடைபெறனறுவருகிறது. நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது சாய ஆலைகளிலிருந்து அதிகளவு சாயக்கழிவுகள் கலக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு, அது போல் நூறு சதவிகிதம் இல்லை. எந்த இடத்தில் என்று தெரிந்தால் அவர்களை பிடித்து மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கவும் தயாராக உள்ளோம். அதுபோல் நொய்யல் ஆற்றில் இல்லை. 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது என்றார். காகித ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை விவசாய நிலங்களில் செலுத்துவது குறித்த கேள்விக்கு, காகித ஆலை கழிவுகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவது தவறில்லை. பவானிசாகர் பகுதியில் செயல்படும் காகித ஆலை கழிவுகள் விவசாயத்திற்கு தான் பயன்படுத்துகிறார்கள். கிணறுகள் மாசடைந்துள்ளதான குற்றச்சாட்டிற்கு யாரு தொழில்செய்தாலும் பொறாமை அதிகரித்துள்ளது ஆலைகள் செயல்படுவதை கெடுக்கும் எண்ணம் கொண்ட சிலர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். காகித ஆலை கழிவுகள் நிலத்திற்கு உரமாக செயல்படுகிறது. பவானிசாகர் பகுதியில் வாழைகள் நல்லமுறையில் விளைச்சல் பெற்றுவருவதாக புது விளக்கம் அளித்தார். ஆறு மாசு படுவதை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து திட்டம் தயாரிக்கப்பட்டுவருகிறது. இன்னும் கொஞ்சகாலத்தில் எந்த ஒரு கழிவும் சுத்திகரிக்கப்படாமல் ஆறுகளில் கலக்கமுடியாது படிப்படியாக நிறைவேற்றப்படும். சித்தோடு முதல் கோபிசெட்டிபாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.350 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் சாலை அமைக்க நிலம் கையப்படுத்தப்படும் என்று தெரிந்தவுடன் சிலர் நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு பெற்றுவிடுகின்றனர். அதனால் பணிகள் தாமதம் ஆவதாகவும் தெரிவித்தார். ஈரோட்டை பிரித்து கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை தற்போது இல்லை. வரும் காலத்தில் தேவையேனில் பிரிக்கப்படும். மாவட்டம் பிரிப்பது குறித்து கொ.ம.தே.கட்சி ஈஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு, அவர் ஏதோ தமாசுக்கு சொல்லியிருப்பார் என அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.