ETV Bharat / state

கேள்விக்கு பதிலளிக்காமல் எழுந்து சென்ற அமைச்சர்!

author img

By

Published : Jan 3, 2021, 7:19 PM IST

ஈரோடு: மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்காமல் எழுந்து சென்றுவிட்டார்.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது நேற்று(ஜன.2), ஈரோடு மாவட்டம் கோபிசட்டிபாளையத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில், அமைச்சர் செங்கோட்டையன் மீது ஸ்டாலின் சரமாரியாக புகார் தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் சொல்லாமல் அமைச்சர் எழுந்து சென்றுவிட்டார்.

இதையும் படிங்க: ’அதிமுக தொண்டர்களிடமிருந்து திமுகவை ஸ்டாலின் காப்பாற்றட்டும்’ : முதலமைச்சர் பழனிசாமி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது நேற்று(ஜன.2), ஈரோடு மாவட்டம் கோபிசட்டிபாளையத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில், அமைச்சர் செங்கோட்டையன் மீது ஸ்டாலின் சரமாரியாக புகார் தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் சொல்லாமல் அமைச்சர் எழுந்து சென்றுவிட்டார்.

இதையும் படிங்க: ’அதிமுக தொண்டர்களிடமிருந்து திமுகவை ஸ்டாலின் காப்பாற்றட்டும்’ : முதலமைச்சர் பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.