ETV Bharat / state

முகநூலில் பதிவிட்ட கைபேசி எண்: பெண்ணை மிரட்டி தங்கநகை அபகரிப்பு

ஈரோடு: பொருட்கள் விற்பனைக்காக முகநூலில் பதிவு செய்த கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு, பொருட்கள் வாங்குவது போல் நடித்து விற்பனையாளரை மிரட்டி 6 அரை சவரன் நகையை பறித்த காதல் ஜோடிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Oct 21, 2019, 11:06 AM IST

முகநூலில் தொடர்பு கொண்டு விற்பனையாளரிடம் கொள்ளையடித்த காதலர்கள்!

சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்த ஜானகி என்பவர் தனது ஆயுர்வேத தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய முகநூலில் கைபேசி எண்ணை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பாலசுப்பிரமணியன் என்பவர் தனது காதலி சுகன்யாவை அக்கா என்று அறிமுகப்படுத்தி ஜானகியுடன் பேசியுள்ளார்.

பெண்ணை மிரட்டி கொள்ளையடித்தவர்கள் கைது

பின்னர் இவர்கள் இருவரும் ஆயுர்வேத பொருட்களை வாங்கிக் கொள்வதாக கூறி ஈரோடு மாவட்டம் பரிசல்துறை என்ற இடத்திற்கு ஜானகியை வரவழைத்துள்ளனர். இதை நம்பிச் சென்ற ஜானகியிடம் பொருட்கள் வாங்குவது போல் நடித்து, அவர் அணிந்திருந்த 6 அரை சவரன் தங்க நகையை இருவரும் சேர்ந்து மிரட்டி பிடுங்கிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் ஜானகி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க :

அரசு கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்வது மகிழ்ச்சியளிக்கிறது - பழனிசாமி

சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்த ஜானகி என்பவர் தனது ஆயுர்வேத தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய முகநூலில் கைபேசி எண்ணை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பாலசுப்பிரமணியன் என்பவர் தனது காதலி சுகன்யாவை அக்கா என்று அறிமுகப்படுத்தி ஜானகியுடன் பேசியுள்ளார்.

பெண்ணை மிரட்டி கொள்ளையடித்தவர்கள் கைது

பின்னர் இவர்கள் இருவரும் ஆயுர்வேத பொருட்களை வாங்கிக் கொள்வதாக கூறி ஈரோடு மாவட்டம் பரிசல்துறை என்ற இடத்திற்கு ஜானகியை வரவழைத்துள்ளனர். இதை நம்பிச் சென்ற ஜானகியிடம் பொருட்கள் வாங்குவது போல் நடித்து, அவர் அணிந்திருந்த 6 அரை சவரன் தங்க நகையை இருவரும் சேர்ந்து மிரட்டி பிடுங்கிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் ஜானகி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க :

அரசு கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்வது மகிழ்ச்சியளிக்கிறது - பழனிசாமி

Intro:ஈரோடு ஆனந்த்
அக்.20

பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது!

ஆயுர்வேத பொருட்களை வாங்குவது போல் நடித்து விற்பனை பிரதிநிதியை மிரட்டி ஆறரை சவரன் நகை பறித்த காதலன், காதலியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Body:சேலம் மாவட்டம் மல்லூரை சேர்ந்த ஜானகி என்பவர் தனது ஆயுர்வேதிக் பொருட்களை விற்பனை செய்ய முகநூலில் தனது மொபைல் எண்ணை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பாலசுப்பிரமணியன் என்பவர் வாடிக்கையாளர் தனது காதலி சுகன்யாவை அக்கா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜானகியுடன் பேசி உள்ளார்.

பின்னர் தான் ஆயுர்வேத பொருட்களை வாங்கிக் கொள்வதாக கூறி ஈரோடு மாவட்டம் பரிசல்துறை என்ற இடத்திற்கு ஜானகியை வரவழைத்துள்ளார். இதனை நம்பி அங்கு சென்ற ஜானகியிடம் பொருட்கள் வாங்குவது போல் நடித்து ஜானகி அணிந்திருந்த ஆறரை சவரன் நகையை பாலசுப்பிரமணியன் மற்றும் சுகன்யா இருவரும் சேர்ந்து மிரட்டி பிடுங்கி சென்றுள்ளனர்.

Conclusion:இதுகுறித்து ஜானகி அளித்த புகாரின் அடிப்படையில் மொடக்குறிச்சி போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.