ETV Bharat / state

எலத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

author img

By

Published : Apr 9, 2019, 7:31 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே எலத்தூர் பேரூராட்சியில் மயானத்திற்கு செல்லும் பாதையில் அனுமதியின்றி மண் அள்ளியதில் பாதை அழிக்கப்பட்டதாகக்கூறி, அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எலத்தூர் பேரூராட்சிஅலுவலகம் முற்றுகை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள எலத்தூர் பேரூராட்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் சாலை அமைத்தல், கட்டடப்பணிகள் என பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அரசு குத்தகைதாரர்கள் மூலம் நடைபெற்றுவருகின்றன.

இப்பகுதியில் உள்ள மயானத்திற்கும் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனால் மயானத்திற்கு செல்லும் சாலையில் அதிகளவு அரசு அனுமதியின்றி மண் அள்ளியதில் சாலை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், ஆளும் கட்சியினருடன் இணைந்து அரசு திட்டப்பணிகள் குத்தகைதாரர் மற்றும் எலத்தூர் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் எலத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எலத்தூர் பேரூராட்சிஅலுவலகம் முற்றுகை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் வட்டாட்சியர் உமாமகேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து மண் அள்ளியுள்ள இடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

பொதுமக்கள் கூறும் புகார் உண்மை என முடிவுசெய்து சம்பந்தப்பட்ட குத்தகைதாரர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள எலத்தூர் பேரூராட்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் சாலை அமைத்தல், கட்டடப்பணிகள் என பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அரசு குத்தகைதாரர்கள் மூலம் நடைபெற்றுவருகின்றன.

இப்பகுதியில் உள்ள மயானத்திற்கும் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனால் மயானத்திற்கு செல்லும் சாலையில் அதிகளவு அரசு அனுமதியின்றி மண் அள்ளியதில் சாலை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், ஆளும் கட்சியினருடன் இணைந்து அரசு திட்டப்பணிகள் குத்தகைதாரர் மற்றும் எலத்தூர் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் எலத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எலத்தூர் பேரூராட்சிஅலுவலகம் முற்றுகை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் வட்டாட்சியர் உமாமகேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து மண் அள்ளியுள்ள இடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

பொதுமக்கள் கூறும் புகார் உண்மை என முடிவுசெய்து சம்பந்தப்பட்ட குத்தகைதாரர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.


டி.சாம்ராஜ்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
09.04.2019

எலத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சியில் மயானத்திற்கும் செல்லும் பாதையில் அரசு திட்டப்பணிகள் செய்யும் குத்தகைதாரர் அனுமதியின்றி மண் அள்ளியதால் பாதை அழிக்கப்பட்டதாகக்கூறி இப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பேரூராட்சி அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சியில் தமிழக அரசின் சார்பில் சாலை அமைத்தல் மற்றும் கட்டிப்பணிகள் என பல்வேறு திட்டப்பணிகள் செயல்பட்டுவருகிறது. இப்பணிகள் அரசு குத்தகைதாரர்கள் மூலம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மயானத்திற்கும் சாலை மேம்பாட்டுப்பணிகளும் நடைபெற்றுவருகிறது. அதனால் மயானத்திற்கு செல்லும் சாலையில் அதிகளவு அரசு அனுமதியின்றி மண் அள்ளியதால் சாலை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதக்கூறியும் ஆளும் கட்சியினருடன் இணைந்து அரசு திட்டப்பணிகள் குத்தகைதாரர் மற்றும் எலத்தூர் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி இப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் எலத்தூர் பேருhட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் தாசில்தார் உமாமகேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து மண் அள்ளியுள்ள இடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்கள் கூறும் புகார் உண்மை என முடிவு செய்து சம்பந்தப்பட்ட குத்தைதாரர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தைக்கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் எலத்தூர் பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது


TN_ERD_SATHY_01_09_MUTTRUGAI_VIS_TN10009
(FTP இல் உள்ளது)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.